இன்று முதல் அமலுக்கு வந்தது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம்

மத்திய அரசு அமைத்துள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்கான சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு மாநில அளவில் அணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உரிமையாளர்களுடன் இணைந்து பாதுகாப்பு குறித்த புள்ளிவிவரங்களை வகுக்க சட்டம் வகை செய்கிறது. அதன்படி அமைக்கப்பட்ட ஆணையம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மத்திய ஜல் சக்தி … Read more

சென்னை பக்தரின் உயில்படி நன்கொடையாக ஏழுமலையானுக்கு ரூ.9.2 கோடி: தேவஸ்தானத்திடம் உறவினர்கள் வழங்கினர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னை பக்தர் ரூ.9.2 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர். பர்வதம் (76). திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.3.2 கோடி பணத்தை ஏழுமலையானுக்கு சேர வேண்டுமென உயில் எழுதி வைத்திருந்தார். டாக்டர் பர்வதம் தற்போது பர்வதம் காலமானதையடுத்து, சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் அவரது சகோதரி ரேவதி மற்றும் … Read more

ஹிஜாப் அணிய தடை.. "சுயமரியாதை முக்கியம்".. வேலையைத் தூக்கி எறிந்த பேராசிரியை!

கர்நாடகத்தில் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார் உதவிப் பேராசிரியை ஒருவர். கர்நாடகத்தில் சில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் பிரச்சினை வெடித்தது. மாணவ, மாணவியர் போராட்டங்களில் குதித்தனர். இதனால் கல்வி நிறுவன வளாகங்கள் போர்க்களமாகின. இந்த நிலையில், தற்போது கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து ஹிஜாப் விவகாரம் அனலடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஒரு கல்லூரி விரிவுரையாளர் … Read more

அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு <!– அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெ… –>

38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு எஞ்சிய 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு Source link

தூங்கவிடாமல் தடுக்கும் எச்சரிக்கை கருவி: நாக்பூர் ஓட்டுனர் கண்டுபிடிப்பு

வாகனங்கள் ஓட்டும்போது ஓட்டுனர்கள் தூங்கிவிடுவதால் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுப்பதற்காக வாகன ஓட்டுனர்களை தூங்கவிடாமல் எச்சரிக்கும் வகையில் சாதனம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார் நாக்பூரைச் சேர்ந்த ஓட்டுனர் கௌரவ் சவ்வாலாகே என்பவர். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- சமீபத்தில் தூக்கம் காரணமாக இரவில் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானேன். அதனால் வாகனம் ஓட்டும்போது யாராவது தூங்கினால் எச்சரிக்கை அளிக்கும் வகையில் கருவி ஒன்றை உருவாக்க நினைத்தேன். அதன்படி, அதிர்வுகளுடன் கூடிய … Read more

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும்!: கேரள சட்டமன்றத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையில் திட்டவட்டம்..!!

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயர்த்தப்படாது என்றும் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையின் நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, கொரோனா காலத்தில் கேரளா அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், அரசின் 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முல்லை பெரியாறு அணையின் … Read more

2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

அகமதாபாத்: 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 21 குண்டுகள் வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 70 நிமிடங்களில் எல்லாம் நடந்து முடிந்தது. இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஹர்கத் உல் … Read more

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது – மாநில அரசு இப்படியொரு ஷாக்!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உள்ளது. இதை 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலத்தில் மட்டுமே அரசு ஊழியர்களின் ஓய்வு … Read more

ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு.! <!– ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு.! –>

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே இன்று காலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 3 புள்ளி 8 ரிக்டராக பதிவாகியதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூருக்கு வடமேற்கே 92 கிலோமீட்டர் தொலைவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகிய இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதவிவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. Source link

சுயேட்சையாக போட்டியிடும் மனைவிக்கு விவாகரத்து நோட்டீசு அனுப்பிய கணவர்

கொல்கத்தா: மேற்குவங்காள மாநிலம் தெற்கு டம்டம் நகராட்சி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் 9-வது வார்டில் போட்டியிட சுர்ஜித்ராய் சவுத்ரி என்பவர் விருப்பமனு செய்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் மனைவி ரீட்டா ராய் சவுத்ரிதாசுக்கு சீட் வழக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரத்தில் அந்த வார்டில் தும்பாதாஸ் கோஷ் என்பவருக்கு 9-வது வார்டு ஒதுக்கப்பட்டது. இதை சரிகட்டும் வகையில் சுர்ஜித் ராய் சவுத்ரிக்கு 10-வது வார்டில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. … Read more