மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக புர்கா அணிந்து வந்த முஸ்லிம் மாணவியிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய கல்லூரி நிர்வாகம்

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக புர்கா அணிந்து கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவியிடம், கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியது. மத்தியபிரதேச மாநிலம் சாத்னா மாவட்டம் சாத்னா பகுதியில் அரசு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் எம்.காம் படிக்கும் மாணவி ருக்சானா கான் என்பவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு புர்காவும், ஹிஜாபும் அணிந்து வந்துள்ளார். இதையடுத்து அவரைக் கண்டித்த கல்லூரி நிர்வாகம் அவரை மன்னிப்புக் கடிதம் எழுதித் தருமாறு கேட்டுள்ளது. இதையடுத்து ருக்சானாவும் மன்னிப்புக் … Read more

சிசிடிவி கேமராவில் பதிவான வெண்மை நிற மர்ம உருவம்.. "பேய்" என கிளப்பப்பட்ட வதந்தி – பீதியாகிக் கிடக்கும் மக்கள் <!– சிசிடிவி கேமராவில் பதிவான வெண்மை நிற மர்ம உருவம்.. &quot;பேய்&quot;… –>

புதுச்சேரியில் நள்ளிரவில் சிசிடிவி கேமராவில் வெள்ளை உருவம் ஒன்று அங்கு இங்கு உலவுவது போன்று பதிவாகி உள்ளது. இதனை பார்த்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக தெரிவித்தனர். வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் திருட்டு சம்பவங்களை குறைக்க சிசிடிவியை பொருத்தி உள்ளனர். நேற்று அப்பகுதியில் பதிவாகி இருந்த கேமரா பதிவுகளை பார்த்தபோது கடந்த 4 ம் தேதி வெள்ளிக்கிழமை 1 மணியளவில் … Read more

உத்தரபிரதேசத்தில் வாக்கு எந்திரங்கள் இருக்கும் அறையை காவல் காக்கும் சமாஜ்வாடி வேட்பாளர்கள்

லக்னோ: 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடந்தது. இதில் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிக்கு தேர்தல் நடந்தது. முதல்கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் வாக்குகள் பதிவான எந்திரங்கள் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டன. அங்குள்ள அறைகளில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எந்திரங்கள் இருக்கும் … Read more

ஒன்றிய அரசு சலுகை டிரோனுக்கு பைலட் சான்று தேவையில்லை

புதுடெல்லி: இந்தியாவில் சமீப காலமாக டிரோன்களின் பயன்பாடு அதிகமாகி இருக்கிறது. காஷ்மீரில் கடந்தாண்டு விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, டிரோன்களின் பயன்பாட்டுக்கு ஒன்றிய அரசு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது, டிரோன்களின் பயன்பாடு, உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு பல்வேறு சலுகைகளையும், கட்டுப்பாடு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் 2 கிலோ எடையுள்ள டிரோன்களை இயக்குவதற்கு ரிமோட் … Read more

கர்நாடக மாநில அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையில் தொழுகை நடத்திய மாணவர்கள்: அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறையில் தொழுகை நடத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி யுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு வட்டாரத்தில் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகளுக்கு ஹிஜாப்அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதனால் உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேவேளையில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் தென் கன்னட மாவட்டம் கடபா அருகிலுள்ள அங்கதட்காவில் அரசு தொடக்கப் … Read more

ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல.. திட்டமிட்ட சதி- கேரள ஆளுநர் கருத்து

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு மறுப்பு தெரவித்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 … Read more

ஐதராபாத்தில் 120 கிலோ தங்கத்திலான சிலை திறப்பு ஆழ்வார் முக்கியத்துவத்தை உலகிற்கு கொண்டு சென்றவர் ராமானுஜர்: குடியரசு தலைவர் பேச்சு

திருமலை: ஐதராபாத் முச்சிந்தலில் ரூ.1000 கோடியில் 216 அடி உயர ராமனுஜரின் சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி முதல் சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் லட்சுமி நாராயண ஹோமம் நடைபெற்று வருகிறது. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக யாகம், பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனவைியுடன் தனி விமானம் மூலம் ஐதராபாத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் … Read more

கேரளாவில் பாஜக சார்பில் முதல்முறையாக மாவட்ட குழு உறுப்பினராக திருநங்கை நியமனம்

கேரளாவில் பாஜக சார்பில் முதல்முறையாக மாவட்ட குழு உறுப்பினராக திருநங்கை ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் அதிதி அச்சுத் (34). திருநங்கையான இவர் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் பயின்றுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் அங்கமான இந்திய மாணவர் கூட்டமைப்பின் உள்ளூர் தலைவராக பதவி வகித்துள்ளார். பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இப்போது, அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் மாநிலத்திலேயே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட … Read more

பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத முதல்வர் மக்களை எப்படி பாதுகாப்பார்? – அமித் ஷா கேள்வி!

பிரதமருக்கே பாதுகாப்பு அளிக்காத முதல்வர் மக்களை எப்படி பாதுகாப்பார்? என, மத்திய உள்துறை அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில், 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், … Read more

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்பு <!– 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்பு –>

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5ஜி அலைக்கற்றைக்கான ஏல பரிந்துரையை மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விரைவில் வழங்க உள்ளது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் ட்ராய் பரிந்துரை அளிக்கும்பட்சத்தில், 2 மாதத்தில் ஏலம் நடைபெறும் என தொலைத்தொடர்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக பதிவிறக்க வேகத்தை 5ஜி கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அத்துறை குறிப்பிட்டுள்ளது. 5ஜி அலைக்கற்றை … Read more