டெல்லியில் 10ஆண்டு பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கு முறையீடு தள்ளுபடி <!– டெல்லியில் 10ஆண்டு பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அ… –>

டெல்லியில் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனத்தைப் பயன்படுத்த அனுமதி கோரிய முறையீட்டை ஏற்கத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. டெல்லியில் காற்று மாசடைவதைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பத்தாண்டுக்கு மேல் பழைமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுக்கு மேல் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் இயக்கப் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசு செய்த முறையீட்டை ஏற்கெனவே தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. ஒரு டீசல் வாகனம் வெளியிடும் மாசு, 24 பெட்ரோல் … Read more

ஒடிசா பஞ்சாயத்து தேர்தல்: வேட்பாளர்களுக்கு பரீட்சை வைத்த கிராம மக்கள்

புவனேஸ்வர்: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள குத்ரா பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த பதவிக்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய அவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 9 வேட்பாளர்களில் 8 பேர் தேர்வை எழுத ஒப்புக் கொண்டனர். அதன்படி அவர்களுக்கு பரீட்சை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு 7 கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களுக்கு பதில் அளிக்க 30 … Read more

பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்: PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல்

அமராவதி: பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட EOS-04 செயற்கைக்கோள் PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு சதிஷ் தவான் தளத்தில் இருந்து செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு 44,877 ஆக குறைவு: சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5.37 லட்சமாக சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 44,877 என்றளவில் உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 5,37,045 ஆக சரிவடைந்துள்ளது. நாடுமுழுவதும் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் எல்லா மாநிலங்களிலும் படிப்படியாக தளர்வுகள் அமலாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக கரோனா பரவலும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: கடந்த 24 … Read more

ஹிஜாப் பிரச்சினை: உலக நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஒன்றை கர்நாடக உயர் … Read more

சுரங்கம் தோண்டும் போது மண் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் 7 பேர் உயிருடன் மீட்பு <!– சுரங்கம் தோண்டும் போது மண் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்க… –>

மத்தியப் பிரதேசத்தில் கால்வாய்ப் பணிக்காகச் சுரங்கம் தோண்டியபோது மண் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களில் 7 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கத்னி மாவட்டத்தில் சிலீமனாபாத் என்னுமிடத்தில் கால்வாய்த் திட்டத்துக்காகச் சுரங்கம் தோண்டும்போது மண் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து மண்ணை அகற்றி 7 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் இருவரை மீட்கும் பணிகள் … Read more

பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது

புதுடெல்லி: பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில் அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் செப்டம்பர் 10-ந் தேதி இணைக்கப்பட்டன. 2-வது கட்டத்தில் 3 … Read more

மத்தியப் பிரதேசத்தில் மண் சரிவில் சிக்கிய 9 தொழிலாளர்கள்: 7 பேரை மீட்ட பேரிடர் மீப்புக்குழு; இதர 2 பேரை மீட்க முயற்சி

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாதாள கால்வாய் திட்ட கட்டுமான பணி நடந்த போது மண் சரிவு ஏற்பட்டு 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 பேரின் கதி தெரியவில்லை. கட்னி மாவட்டத்தில் உள்ள நர்மதா நதியின் வலது கரையில் பாதாள கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று மாலை தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவு ஏற்பட்டு பாதாள கால்வாய் … Read more

"மிக்கி மவுஸ்" என காந்தி செல்லமாக அழைத்த சரோஜினி நாயுடு – பிறந்த நாள் பகிர்வு

‘இந்தியாவின் நைட்டிங்கேல்,’ ‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10. * சரோஜினி நாயுடு 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதாராபாத்தில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள் இந்தியாவில் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. * சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் … Read more

லஞ்சம் பெற்று பயனர்களின் தகவல் வெளியீடு: 20 இபிஎப்ஓ பணியாளர்கள் மீது வழக்கு – சிபிஐ அதிரடி

லஞ்சம் பெற்று பிஎப் பயனாளர்கள் பற்றிய தகவலைத் வெளியிட்ட 20 இபிஎப்ஓ நிறுவன பணியாளர்கள் மீது மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) வழக்கு பதிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற தனியார் நிறுவனங்களுக்கு இவர்கள் பயனர்கள் பற்றிய விவரங்களைத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு பயனர்கள் பற்றிய தகவல்களை இபிஎப்ஓ அலுவலக பணியாளர்களே அளிப்பது தொடர்பாக வெளியான புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது. குண்டூரில் உள்ள … Read more