இந்தியாவில் புதிதாக 44,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– இந்தியாவில் புதிதாக 44,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்று குறைந்து 44 ஆயிரத்து 877 ஆக பதிவாகி உள்ளது.  ஒரே நாளில் கொரோனா பாதித்த 684 பேர் உயிரிழந்துள்ள  நிலையில், 1 லட்சத்து 17 ஆயிரத்து 591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 3 புள்ளி 17 சதவீதமாக குறைந்திருப்பதுடன், நாடு முழுவதும் 5 லட்சத்து 37 ஆயிரத்து 45 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் மெகுனிபூர் மாவட்டம் ரங்கேமகி என்ற பகுதியில் கங்கஸ்வதி ஆறு ஓடுகிறது. இதன் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக திகழும் இந்த பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வருவது வழக்கம். நேற்று சில இளைஞர்கள் இங்கு வந்து இயற்கை அழகை ரசித்தனர். திடீரென அவர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் நின்று ஆர்வத்துடன் ‘செல்பி’ எடுத்தனர். அப்போது அந்த வழியாக மெகுனிபூரில் இருந்து ஹவுராவுக்கு ரெயில் வந்தது. தண்டவாளத்தில் இளைஞர்கள் கூட்டமாக இருப்பதை … Read more

அடையாளம் தெரியாத சாமியாரை கேட்டு முடிவுகள்; தேசிய பங்கு சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் மீது புகார்: சித்ராவுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவு

அடையாளம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி தேசிய பங்கு சந்தையின் முக்கிய முடிவுகளை NSE-யின் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா மேற்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. NSE எனப்படும் தேசிய பங்கு சந்தை நிறுவனர்களில் ஒருவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் NSE -யின் நிர்வாக இயக்குனராக இருந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து பங்கு வர்த்தனை வாரியமான செபி விசாரணை மேற்கொண்டது. இதில் … Read more

'ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி' – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் கட்டாயமானதில்லை’ என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுபோல் ஹிஜாப்பிற்கும் அனுமதி அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தலைப்பாகை சீக்கிய மத்தில் ஒரு அங்கம் என்றும், ஹிஜாப் அதுபோன்றதல்ல என கூறியுள்ளார். ஹிஜாப் குறித்து இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் ஆறேழு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது பெண்ணின் உடை நடைமுறையாக … Read more

முகக் கவசத்தில் இருந்து விலக்கு: மகாராஷ்டிர அரசு பரிசீலனை

மும்பை: கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் முகக் கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவிய போது முதல் மாநிலமாக மகாராஷ்டிராதான் அதிகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோபே நேற்று மும்பையில் கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்து வருகிறது. மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தினசரி கரோனா பாதிப்பு 1 சதவீதமாக குறைந்துவிட்டது. … Read more

பொது சிவில் சட்டம்: முதல்வர் சர்ச்சை பேச்சு!

உத்தரக்காண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. புஷ்கர்சிங் தாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வருகிற 14ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. அந்த வகையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் புஷ்கர்சிங் தாமி தனது தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, உத்தராகண்டில் பாஜக வென்றால், பொது சிவில் சட்டம் அமலாகும் என்று உறுதி அளித்தார். உத்தராகண்டில் பாஜக … Read more

கப்பல் கட்டும் நிறுவனம் ஏபிஜி ஷிப்யார்டு, 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி.! <!– கப்பல் கட்டும் நிறுவனம் ஏபிஜி ஷிப்யார்டு, 28 வங்கிகளில் ர… –>

28 வங்கிகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஏபிஜி ஷிப்யார்டு என்ற கப்பல் கட்டும் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. குஜராத் சூரத் நகரைச் சேர்ந்த ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் பாரத் ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் வாங்கிய தொகையை வேறு நோக்கங்களுக்கு திருப்பிவிட்டதாகக்  கூறப்படுகிறது. இந்த நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களிலும் பெரும் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில். ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்திற்குச் சொந்தமான 13 … Read more

ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடித்ததுபோல் கெஜ்ரிவால் பஞ்சாபைக் கொள்ளையடிக்க வந்துள்ளார்- சன்னி கடும் விமர்சனம்

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால் வெற்றிப்பெரும் முனைப்புடன் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் மகள் … Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்கலாமா?.. அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு ஒன்றிட அரசு வலியுறுத்தல்

டெல்லி: பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்கலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு ஒன்றிட அரசு வலியுறுத்தியுள்ளது. முகக் கவசத்தில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி நிர்வாகிகள் குழு கலைப்பு – மம்தா அதிரடி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி நிர்வாகிகள் குழுவை கலைத்து அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் புதிதாக 20 பேர் கொண்ட செயற்குழு ஒன்றை அவர் அறிவித்துள்ளார். திரினாமுல் காங்கிரஸ் கட்சியில் மூத்தத் தலைவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த சூழலில் கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுவை கலைத்து தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே இருப்பதை உறுதி செய்துள்ளார் மம்தா பான்ர்ஜி. தேசிய நிர்வாகிகளை அவர் பின்னர் அறிவிப்பார் … Read more