கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பாக நாளை விசாரணை <!– கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பாக நாளை விசாரணை –>
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது. நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. எனினும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 16ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறப்பது குறித்து நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் … Read more