கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பாக நாளை விசாரணை <!– கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பாக நாளை விசாரணை –>

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது. நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. எனினும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 16ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறப்பது குறித்து நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பொம்மை தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் … Read more

பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.200 ஐ தாண்டும் – அகிலேஷ் யாதவ் பேச்சு

படவுன்: உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் படவுன் மற்றும் ஷாஜஹான்பூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: அவர்கள் (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.200 ஐ தாண்டும்.  ஏழைகள் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் விலையால், அவர்களுக்கு (ஏழைகளுக்கு) மோட்டார் சைக்கிள் அல்லது கார் கூட சொந்தமாக இல்லை. பா.ஜ.க.வின் சிறிய … Read more

நக்சல்களுடன் சண்டை சிஆர்பிஎப் அதிகாரி வீரமரணம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டம், பாசகுடா வன பகுதியில் ஒன்றிய ஆயுதப்படை போலீசார் (சிஆர்பிஎப்) நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நக்சலைட்டுகள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், சிஆர்பிஎப் படையின் உதவி கமாண்டர் சாந்திபூஷன் டிர்க்கி வீரமரணம் அடைந்தார். இது குறித்து போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘‘இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், சம்பவ இடத்துக்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். … Read more

உ.பி.யில் 30 வழக்குகளுடன் குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏ அன்சாரி சமாஜ்வாதி கூட்டணியில் போட்டி: 1996 முதல் பல கட்சி தாவி வெற்றி பெற்றவர்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் குற்றப் பின்னணி கொண்ட எம்எல்ஏ முக்தார் அன்சாரி மீண்டும் மாவ் தொகுதியில் போட்டியிடுகிறார். உ.பி,யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியாக இருப்பவர் முக்தார் அன்சாரி. இவர் மீது ஆள் கடத்தல், பாஜக எம்எல்ஏ கொலை உள்ளிட்ட சுமார் 30 வழக்குகள் உ.பி. மற்றும் பஞ்சாபில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019-ல் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு பஞ்சாப் ரூப்நாகர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், உ.பி.யில் பதிவான வழக்குகளில் அவரிடம் விசாரணை நடத்த … Read more

'அனைவருக்கும் சம உரிமை!'- முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி!

மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமையை அளிக்கும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததும், ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும் என, உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு … Read more

குடும்ப அரசியலைச் சாடிய பிரதமர் மோடி <!– குடும்ப அரசியலைச் சாடிய பிரதமர் மோடி –>

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பக் கட்சிகள் மக்களாட்சியின் சாரத்தையே மாற்றிவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கன்னோசியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதற்கட்டத் தேர்தல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். சாதி, மதம் ஆகியற்றின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என உலகில் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் பல தலைமுறையாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பக் கட்சிகள் … Read more

இடிந்து விழுந்த பாதாள கால்வாய் – சிக்கி தவித்த தொழிலாளர்களில் 5 பேர் மீட்பு

ஸ்லீமனாபாத்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள ஸ்லீமனாபாத் என்ற இடத்தில் நர்மதா நதி வலது கரையில் பர்கி பாதாளக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.  நேற்று தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவால் பாதாளக் கால்வாய் இடிந்து விழுந்தது. இதில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  #WATCH | Of the 9 labourers trapped, … Read more

கலாசாரம், பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் நினைக்கவில்லை: உத்தரகாண்டில் மோடி ஆவேசம்

டேராடூன்: ‘இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் கருதவில்லை. ,’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. கடைசி கட்ட ஓட்டு வேட்டைக்காக பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, இம்மாநிலத்தின் ருத்ராபூரில் நேற்று பிரசாரம் செய்தபோது பிரதமர் மோடி பேசியதாவது: பெரும்பான்மையான மாநிலங்களில் நிராகரிக்கப்பட்ட காங்கிரசை அழிக்கும் வாய்ப்பாக இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேவபூமியில் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிறுவ திட்டமிட்டுள்ள காங்கிரசின் திட்டத்தையும், எல்லாவற்றிலும் … Read more

சென்னை – பெங்களூரு உள்ளிட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு: ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு நடப்பதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார். எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை-பெங்களூரு- மைசூரு, டெல்லி-வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்பட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள ரயில்வே தீர்மானித்துள்ளது. டெல்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், தில்லி-அகமதாபாத், மும்பை- ஐதராபாத், சென்னை-பெங்களூரு- மைசூரு, … Read more

அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு – பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!

உத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 10 … Read more