தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!!

திருவள்ளூர் அருகே தொண்டையில் தேங்காய் சிக்கியதால் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் என்பவரின் மூன்று வயது குழந்தை சஞ்சீஸ்வரன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, சமைப்பதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டு ஒன்றை எடுத்து குழந்தை சாப்பிட்டபோது அது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை … Read more

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி!!

தமிழகத்தில் திரையரங்குகள், உணவகங்கள் நூறு சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.  கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்ததை அடுத்து, மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா ஊரடங்கு உத்தரவு வரும் 15ஆம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் தளர்வுடன் கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நர்சரி, மழலையர் … Read more

இந்து அவமதிப்புக்காக காங்கிரஸில் போட்டாபோட்டியே நடக்கிறது: யோகி ஆதித்யநாத்

உத்தர்காண்ட்: இந்து அவமதிப்பே காங்கிரஸுக்கு எப்போதும் இலக்கு. இதற்காக கட்சிக்குள் அவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இவ்வேளையை செய்கின்றனர் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அங்கு இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தெஹ்ரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “இந்து அவமதிப்பை மேற்கொள்வதில் காங்கிரஸில் கடும் போட்டி நிலவுகிறது. … Read more

ஹிஜாபைத் தொட்டால்.. வெட்டுவேன்.. பெண் தலைவர் பரபரப்பு பேச்சு

ஹிஜாபை யாரேனும் தொட முயன்றால் அவரது கைகள் வெட்டப்படும் என்று சமாஜ்வாடி தலைவர் ரூபினா கானம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் சர்ச்சைகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்த நிலையில் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் ரூபினா கானம் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ரூபினா கானம் அலிகாரில் கர்நாடக ஹிஜாப் தடைக்கு எதிராக போராட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், … Read more

தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார் <!– தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார் –>

தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார் பஜாஜ் குழுமங்களின் முன்னாள் தலைவரான ராகுல் பஜாஜ் காலமானார். அவருக்கு வயது 83 நிமோனியா மற்றும் இதய கோளாறுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் புனே ரூபி ஹால் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராகுல் பஜாஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் Source link

சத்தீஸ்கர் என்கவுண்டர் – சி.ஆர்.பி.எப். அதிகாரி உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் பசகுடா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்த புத்கல் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என சி.ஆர்.பி.எப்  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சி.ஆர்.பி.எப். போலீசாரை நோக்கி நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் 168-வது பட்டாலியனைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.  வீரர் ஒருவர் காயமடைந்தார் என பஸ்டார் நகர ஐ.ஜி. சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். … Read more

உ.பி-யில் 55 தொகுதியில் 2ம் கட்ட தேர்தலுடன் சேர்த்து உத்தரகாண்ட், கோவாவில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

லக்னோ: உத்தரகாண்ட், கோவா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 165 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அதனால் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 58 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் நாளை மறுநாள் (பிப். … Read more

மும்பை: மகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவி

மும்பையில் மகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பையின் புறநகர் பகுதியான அம்போலி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனு கிருஷ்ணா (52). இவர் தனது மனைவி கீதா மற்றும் மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இதனிடையே, சமீபகாலமாக சாந்தனுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு சாந்தனுவின் மனைவி கீதா, காவல் நிலையத்திற்கு போன் செய்து, … Read more

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், அனில் அம்பானிக்கு தடை: செபி அதிரடி உத்தரவு

மும்பை: ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் அனில் அம்பானி மற்றும் 3 பேருக்கு பங்குச்சந்தை உள்ளிட்ட செக்யூரிட்டிஸ் மார்கெட்டில் பங்கேற்க தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின், அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சண்டையிட்டு பிரித்துக் கொண்டனர். சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, குடும்ப சண்டை உருவாகி பின்னர் தாய் மத்தியஸ்தம் செய்து சொத்துக்கள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. இருவரும் … Read more

திருமண வரவேற்பில் மணப்பெண் மூளைச்சாவு.. உறுப்புதானம் செய்த பெற்றோர்!

கர்நாடகத்தில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து , வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் பரிசோதித்தபோது அவர் மூளைச் சாவடைந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள், தங்களது மகளினின் உடல் உறுப்புகளை தானம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் அந்தப் பெண்ணின் பெற்றோரை வெகுவாக பாராட்டியுள்ளார். மக்களுக்கு … Read more