மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் – 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!

கேரள மாநிலத்தில், மலை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞரை மூன்று நாட்களுக்கு பிறகு ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பாபு (வயது 28). இவரும், இவரது நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப் பகுதிக்குள் மலையேறச் சென்றனர். மலையில் இருந்து பாபு இறங்கிய போது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை … Read more

பிரதமர் மோடி பிப்ரவரி 14,16,17 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் பிரச்சாரம் <!– பிரதமர் மோடி பிப்ரவரி 14,16,17 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் ப… –>

பிரதமர் மோடி வரும் 14, 16, 17 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மாளவா, தோவாபா, மாஜா ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கி இந்தப் பிரச்சாரத்தை மோடி மேற்கொள்ள உள்ளார். முதல் கூட்டம் ஜலந்தரில் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் 16 ஆம் தேதி பதான்கோட்டிலும் மூன்றாவது கூட்டம் அபோஹரில் 17 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக பஞ்சாப் மாநில பாஜக பொதுச் செயலாளர் சுபாஷ் சர்மா தெரிவித்துள்ளார். பஞ்சாபில் தேர்தல் … Read more

உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

லக்னோ : உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். பா.ஜனதா, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தல் நடக்கும் … Read more

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது : 623 வேட்பாளர்கள் களத்தில்!

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கு பாஜ தீவிர முயற்சி செய்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் இக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த முறை இம்மாநிலத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற பாஜ, இந்த முறை 234 இடங்களை … Read more

உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை யுடன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை களுக்கு பிப்.10-ம் தேதி (இன்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த 5 மாநிலங்களிலும் … Read more

பிப். 14 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கோவா மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் … Read more

உத்தரப் பிரதேசத்தில் 35 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக அணையாமல் எரியவிடப்படும் ஒரு அணையா ஜோதி <!– உத்தரப் பிரதேசத்தில் 35 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக அணையாமல… –>

உத்தரப்பிரதேசத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் அமர் கிசான் ஜோதி என்ற பெயரில் 35 ஆண்டுகளாக ஜோதி எரியூட்டப்பட்டு வருகிறது. சிசவுலி என்ற இடத்தில் கடந்த 1987ம் ஆண்டு விவசாய சங்கத் தலைவரான மகேந்திர சிங் திகாயத் இந்த ஜோதியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. தினசரி ஒன்றே கால் கிலோ நெய் மூலம் இந்த ஜோதி எரியூட்டப்படுவதாக அதனைப் பாதுகாத்து வரும் நரேந்திர திகாயத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் அமர் கிசான் ஜோதி … Read more

உத்தர பிரதேசத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் – 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு

லக்னோ : உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்கின்றன. முசாபர்நகர், மீரட், பாக்பத், காசியாபாத், ஷாம்லி, ஹாபூர், கௌதம் புத்தநகர், புலந்த்ஷாஹர், அலிகார், ஆக்ரா மற்றும் மதுரா உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த … Read more

விவசாய கடன்கள் தள்ளுபடி கொரோனாவில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம்: உபி.யில் காங். வாக்குறுதி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சட்டீஸ்கரை போன்று விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,’ என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இன்று தொடங்கி 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு முடித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. லக்னோவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ‘உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் … Read more

சென்னையில் எரிபொருள் பேட்டரி தானியங்கி உற்பத்தி மையம்: நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர் கூறியதாவது: நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின் நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% … Read more