பொருளாதார வழித்தடம் குறித்த சீனா-பாக். கூட்டறிக்கையில் மீண்டும் காஷ்மீர் சர்ச்சை: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பொருளாதார வழித்தடம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதாக குறிப்பிட்ட சீனா – பாகிஸ்தானின் கூட்டறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வர்த்தக பயன்பாட்டிற்காக சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்து வருகிறது. இந்த வழித்தடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. ஆனால், பொருளாதார வழித்தடம் குறித்து சீனா – பாகிஸ்தான் வெளியிடும் எந்தவொரு கூட்டறிக்கையிலும் இதை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறாமல் ஜம்மு காஷ்மீர் என்று கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளன.இந்நிலையில், பீஜிங்கில் … Read more

சாலைப் பராமரிப்புகளை மாநில அரசுதான் செய்யவேண்டும்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

புதுடெல்லி: மத்திய அரசிடம் தமிழகத்தின் கிராமப்புற சாலைகளை சீரமைப்பது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பிய நிலையில், ‘அது மாநில அரசின் பொறுப்பு’ என்று கூறி மத்திய இணை அமைச்சர் ஃபகன்சிங் குளஸ்தே பதில் கொடுத்துள்ளார். பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, கடந்த 2021 நவம்பரில் பெய்த பருவ மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக இன்று திமுகவின் மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி, … Read more

உ.பி: தேர்தலுக்கு முந்தைய நாள் கட்சி தாவிய வேட்பாளர்!

உத்தரப் பிரதேசத்தில் நாளை முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளான இன்று கட்சி தாவியுள்ளார் வேட்பாளர் ஒருவர். உத்தரப் பிரதேச மாநிலம் சர்தாவால் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக யவர் ரோஷன் அறிவிக்கப்பட்டார். நாளை தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் யவர் ரோஷன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை … Read more

பெங்களூரில் 2 வாரங்கள் போராட்டம் நடத்தத் தடை.. <!– பெங்களூரில் 2 வாரங்கள் போராட்டம் நடத்தத் தடை.. –>

பெங்களூரில் பள்ளி கல்லூரிகளில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வகையான கூட்டங்களும் போராட்டங்களும் நடத்த இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிவது தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்குக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெங்களூர் மாநகரக் காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி கல்லூரிகளின் வாயிலில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் கூட்டங்களோ, போராட்டங்களோ நடத்தத் தடை விதித்துள்ளது. இந்தக் … Read more

புலனாய்வு விசாரணை அமைப்புகளின் பணிகளில் மத்திய அரசு தலையிடவில்லை – பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: மத்திய புலனாய்வு அமைப்பு,  மத்திய அமலாக்க இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அவற்றின் விதிமுறைகளின்படி செயல்படுகின்றன. விசாரணை அமைப்புகளின் பணிகளில் அரசு தலையிடாது.  இந்தியாவில் ஊழல் என்பது கரையான்கள் போல நாட்டையே பாதிக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக மக்கள் அவ்வப்போது குரல் எழுப்பவில்லையா? நான் ஒன்றும் செய்யவில்லை என்றால் … Read more

போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாக புகார்; ஆளுநரை பதவியில் இருந்து நீக்கக் கோரி ஐகோர்ட்டில் மனு: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அம்மாநில ஆளுநரை பதவியில் நீக்கக் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப்  தன்கருக்கும் இடையே முட்டல் மோதல் நீண்ட காலமாக இருந்து வருகிறது. காவல்துறை அதிகாரிகளை ஆளுநர் மிரட்டுவதாக குற்றம்சாட்டிய முதல்வர் மம்தா  பானர்ஜி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளுநரை பின்தொடர்வதில் இருந்து  வெளியேறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஆளுநர்,  ‘மாநிலத்தின் … Read more

நீட் விவகாரத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறது திமுக, காங். – மக்களவையில் ரவீந்திரநாத் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டை பாராட்டி மக்களவையில் உரையாற்றிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், ‘மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வை காங்கிரஸ் அமலாக்கியதாகவும், இதற்கு திமுக உதவியாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். மக்களவையின் ஒரே ஒரு அதிமுக உறுப்பினரான ரவீந்திரநாத் மேலும் பேசியது: “கரோனா தொற்று உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டு இருந்த வேளையிலும் உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் நாடுகளில் நமது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இது, இந்த மத்திய அரசின் சிறப்பான நிர்வாகத் திறனை எடுத்துக்காட்டுகிறது. … Read more

என்னது இனிமேல் சமோசா கிடையாதா?.. "கட்" செய்த சுகாதார அமைச்சகம்.. ஏன் திடீர்னு?

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கேன்டீனில் இனிமேல் சமோசா விற்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய மக்களின் தேசிய உணவுப் பதார்த்தங்களில் சமோசாவுக்கும் முக்கிய இடம் உண்டு. சமோசா என்றதுமே வாய் திறந்து ஜொள்ளு வடிய ஒரு கடி கடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது.. அந்த அளவுக்கு சமோசாவுக்கு மக்கள் மனதில் தனி இடம் உண்டு. மாலை ஆகி விட்டாலே போதும் சமோசா ஒரு கையும்.. சூடான டீ இன்னொரு கையுமாக இருப்போரை அதிகம் பார்க்க முடியும். சூடான … Read more

ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்… நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு <!– ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்… நேர்மையாக போலீ… –>

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தம்பதியர் ஆட்டோவில் தவறவிட்டுச்சென்ற நகைப்பையை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.  நேற்று ஹஷாம் நகரில் இருந்து டோலிசௌக் பகுதிக்கு ஆட்டோவில் திரும்பிய மிர்சா சுல்தான் பெய்க் – சமீரா பேகம் தம்பதியினர் சுமார் 5 லட்சம் மதிப்புடைய நகைகள் அடங்கிய பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக அவர்கள் லங்கார் ஹவுஸ் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்களது நகைப்பையை மீட்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். … Read more

ஐதராபாத்தில் 216 அடி உயரத்தில் நிறுவப்பட்ட ராமானுஜர் சிலையை தினமும் லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையம் அருகே 216 அடி உயரத்தில் ராமானுஜர் சிலை நிறுவப்பட்டது. இதனை கடந்த சனிக்கிழமை பிரமதர் மோடி திறந்து வைத்தார். ராமானுஜர் சிலை வெள்ளி செம்பு தங்கம் துத்தநாகம் டைட்டானியம் உள்ளிட்டவை கொண்டு பஞ்ச உலோகத்தில் ரூ.135 கோடி செலவில் 216 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை இந்தியாவில் 2-வது உயரமான சிலை ஆகும். ராமானுஜர் சிலை அமைக்கப்பட்ட இடம் 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சிலையை சுற்றிலும் … Read more