ஹிஜாப் வழக்கு: கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஹிஜாப் அணிவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடரபாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, “எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வையுங்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நான் சத்திய … Read more

காதலர் தினத்தில் தரமான சம்பவம்… திருநங்கைகள் முடிவு!

கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகளான சியாமா எஸ் பிரபா, மனு கார்த்திகா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் அதுவும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்ய கொள்ள முடிவு எடுத்துள்ள திருநங்கைகள் ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தகவலை உற்றார், உறவினர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்க அகம் மகிழ்ந்த அவர்கள், இருவரையும் ஆசீர்வாதித்து … Read more

கொரோனா சோதனையைக் கைவிடும் எய்ம்ஸ் மருத்துவமனை <!– கொரோனா சோதனையைக் கைவிடும் எய்ம்ஸ் மருத்துவமனை –>

கொரோனா சூழலில் உள்நோயாளியாகச் சேர்க்கவும், அறுவைச் சிகிச்சைக்கும் முன் நோயாளிகளுக்குச் சோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. இப்போது கொரோனா சோதனையைக் கைவிடுவதாக அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அறுவைச் சிகிச்சைக்கும், வழக்கமான பராமரிப்புக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அறிகுறியற்ற நோயாளிகள், வெளிநோயாளிகள், அவசர நோயாளிகள் ஆகியோருக்கு இது பொருந்தும் என அறிவித்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட தேசிய வழிகாட்டுதலின்படி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   Source link

கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் இறப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதிலளித்தார்.  அதன் விவரம் வருமாறு: 2018  முதல் 2020-ம் ஆண்டுக்கு இடையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். புள்ளிவிவரங்களின்படி, 9,140 பேர் வேலையின்மை காரணமாகவும், 16 ஆயிரத்து 91 பேர் கடன் தொல்லை காரணமாகவும் இறந்துள்ளனர். … Read more

ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் பண்ற வேலையா இது ?

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட மேலாரணி மதுரா, தாங்கல் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 55 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக காளியப்பன் (வயது 55) மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர் . இந்நிலையில் பள்ளித் தலைமையாசிரியர் காளியப்பன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி சாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . சம்பவ … Read more

‘‘சமத்துவத்தின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது – இதுதான் ஆத்ம நிர்பார்’’ – ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: சமத்துவச் சிலை சீனாவில் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் ஆத்ம நிர்பார் கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை … Read more

சீன தயாரிப்பான ஆத்மநிர்பார்: பிரதமர் மோடியை கலாய்த்த ராகுல் காந்தி!

ஹைதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமத்துவ சிலை என பெயரிடப்பட்டுள்ளது. ராமானுஜரின் 1000 ஆண்டுகள் பூர்த்தியானதன் நினைவாக ரூ.1,200 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்டமான சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து இச்சிலையையும், இங்கு கட்டப்பட்டுள்ள … Read more

நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது கொரோனாவால் பாதித்தவர்கள் விரைவாக குணமடைவதாக ஆய்வில் தகவல் <!– நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது கொரோனாவா… –>

கொரோனா தொற்று பாதித்து ஆக்சிஜன் குறைபாடால் அவதிப்படும் நோயாளிகளை குறைந்த செலவில் விரைவாக குணமடையச் செய்யும் வகையில் நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை முகரச் செய்யும் சிகிச்சை குறித்து கேரளாவின் அம்ரிதா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அம்ரிதா விஷ்வ வித்யபீடத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சேர்ந்து ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அம்ரிதா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மீது சோதனை செய்து பார்க்கப்பட்டதில், சாதாரண சிகிச்சையோடு நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது, கொரோனா வைரஸ் கிருமிகளை … Read more

சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்க எதிர்ப்பு தெரிவித்து பிப். 14 முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.  இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் … Read more