கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 8 லட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வருகை.! <!– கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 8 லட்சத்து 25 ஆயிரம் வெளிநாட… –>

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 2019 முதல் 2021 வரை 8 லட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானத் ராய் பதிலளிக்கையில், 26 ஆயிரத்து 599 பேர் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் தங்கி இருந்ததாகவும், அப்படி இருந்தவர்கள் குறித்து உண்மைத்தன்மை அறிந்து விசா நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். Source link

2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி பாறை இடுக்கில் சிக்கிய தவிக்கும் வாலிபர்: மீட்புப் பணியில் ராணுவம்

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள … Read more

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் :ஒன்றிய அரசு

டெல்லி : உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் 2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், டி நிறுவனம் மீது 'உபா' சட்டத்தின் கீழ் என்ஐஏ வழக்கு

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது டி-கம்பெனி மீது உபா சட்டம் என்று அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ்என்ஐஏ வழக்கு பதிவு செய் துள்ளது. நிழல் உலக தாதாவும் 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிழல் உலக நிறுவனம் டி-கம்பெனி என அழைக்கப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் … Read more

சென்னை டூ திருப்பதி… போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் வரப்போகுது விடியல்!

நாட்டின் சாலை போக்குவரத்தில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கிய பங்கு பெறுகின்றன. இந்த சாலைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டே இந்த சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ( NHAI ) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன்படி சென்னை – திருப்பதி இடையிலான, தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் வாகனங்களின் போக்குவரத்தை கவனத்தி்ல் கொண்டு, இந்த சாலையை, 20 கிலோமீட்டர் … Read more

ராஜஸ்தானில் ராணுவ சீருடையில் வலம் வந்து இந்தியாவின் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளி கைது.! <!– ராஜஸ்தானில் ராணுவ சீருடையில் வலம் வந்து இந்தியாவின் தகவல்… –>

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் இந்திய ராணுவ சீருடையில் வலம் வந்து ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்த நிலையில் ராஜஸ்தான் போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சக்திபால் சக் என்ற பெயரிட்ட அந்த நபர் ராஜஸ்தானின் சிறிய டவுண் ஒன்றில் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராணுவ சீருடையில் சென்று நட்புகொண்டு தகவல்களைப் பெற்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். ராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை அவருடைய மொபைலில் … Read more

தேசியக் கல்விக் கொள்கை அமலாக்கப்பட வேண்டும் – குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

புதுடெல்லி: மகாராஷ்ட்ரா மாநில கல்வி சங்கத்தின் 160 ஆண்டுகள் வரலாறு குறித்த நூல் வெளியீடு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பேசியதாவது: இந்த நாடு அறிந்துள்ள வீரமிக்க நாயகர்களின் கதைகளை நாம் நமது குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நமது புகழ்மிக்க வரலாற்றால் நமது தாழ்வு மனப்பான்மையை வீழ்த்த வேண்டும்.வரலாறு நமக்கு கற்றுத் தருகிறது, அறிவை பிரகாசிக்க வைக்கிறது.  தேசத்தின் போற்றப்படாத நாயகர்களை கவுரவிக்கவும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை பள்ளிக் குழந்தைகள் அறியப்பட வேண்டும். இந்தியாவின் … Read more

மேகதாது விவகாரம் பற்றி டெல்லியில் கர்நாடகா முதல்வர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என ஒன்றிய அரசு கூறியதை தொடர்ந்து, டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கர்நாடகா முதல்வர் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது. இந்நிலையில், ‘தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட … Read more

காஷ்மீர் குறித்து ஹூண்டாய் பாகிஸ்தான் சர்ச்சை கருத்து: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் வருத்தம் தெரிவித்த தென் கொரிய அமைச்சர்

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பாக ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம் வெளியிட்ட பதிவுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிப்ரவரி 5-ம்தேதி காஷ்மீர் ஒற்றுமை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் மேற்கொண்டு வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்தப் பதிவுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க … Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என, முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்டத் தேர்தல், மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏழு … Read more