பல தேர்தல்களில் தோற்றாலும் காங்கிரஸ் கட்சி அகங்காரத்தை கைவிடவில்லை – பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி: மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு பிறகு இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஏழைகளை லட்சாதிபதியாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழைகளுக்கும் வங்கி கணக்கு வசதி கிடைக்கப் பெற்றுள்ளது. இன்று ஏழ்மையிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு எரிவாயு சிலிண்டர் வசதி கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. தெலுங்கானா … Read more

தமிழகம்-கர்நாடகா இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி; ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: தமிழகம்-கர்நாடகா இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அஷ்வினிகுமார் மக்களவையில் பதில் அளித்துள்ளார்.

ஓவைசி ஜி… 'இசட்' பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் – மாநிலங்களவையில் அமித் ஷா வலியுறுத்தல்

புதுடெல்லி: ஹைதராபாத் மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசியை மத்திய அரசின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்புச் சலுகையை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு காரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் சேதமடைந்தது. வேறொரு காரில் ஏறி ஒவைசி டெல்லி சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் … Read more

மனைவிமார்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு.. கணவர்களுக்கு சீட் கொடுத்த பாஜக.. !

உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் 2 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பாஜக தலைமை அவர்களுக்குப் பதில் அவர்களது கணவர்களுக்கு டிக்கெட் கொடுத்துள்ளது. நேற்று மாலை பாஜகவின் 9வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் முக்கிய வேட்பாளராக உ.பி. பாஜக மாநிலத் துணைத் தலைவர் தயா சங்கர் சிங் இடம் பெற்றுள்ளார். இவரை பல்லியா தொகுதியில் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. தயா சங்கர் சிங்கின் மனைவியான ஸ்வாதி சிங் கேபினட் அமைச்சராகவும் இருக்கிறார். அவர் … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் மட்டுமே கட்டாயமில்லை – மத்திய அரசு <!– கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் மட்டுமே கட்டாயமில்லை – மத… –>

கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டை மட்டுமே கட்டாயமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டை விவரங்களை கட்டாயம் கோருவதாகக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, தடுப்பூசி செலுத்த ஆதார் அட்டையை மட்டுமே அடையாள சான்றாக காண்பிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்தக்கூடாது என நீதிபதிகள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து, தடுப்பூசி செலுத்துவதற்கு பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ரேசன் அட்டை உள்ளிட்ட 9 அடையாள … Read more

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லி நியமனம்

புதுடெல்லி: தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26-ம் தேதி, குடியரசு நாளன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என அறிவித்தார். இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், … Read more

புதுச்சேரியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயம்: புதுச்சேரி தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் ரகுபதி மனு

புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் வாங்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயமாகியுள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக அமைப்பை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விவரத்தை பெற்றுள்ளார். இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை … Read more

விளக்கம் தேவையில்லை; மன்னிப்பு கோருங்கள்: ஹூண்டாய் நிறுவனத்துக்கு சிவசேனா எம்.பி. கெடுபிடி

காஷ்மீர் பிரிவினவாதிகளை ஆதரித்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் டீலர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் வைரலான நிலையில் அது குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி மன்னிப்பு கோர வலியுறுத்தியுள்ளார் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி. முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்தியளவில் #BoycottHyundai ட்ரெண்டானது. இந்திய அளவில் ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு … Read more

ஹிஜாப் சர்ச்சை: மதச்சார்பின்மை எனும் பாசாங்கு!

ஒரு மாதத்துக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் புர்கா அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது சர்ச்சையைத் தோற்றுவிக்க, இந்துத்துவக் குழுக்கள் இஸ்லாமிய மாணவர்கள் தம் மதச்சின்னங்களை அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரச்சாரம் செய்தனர். அடுத்து ஹிஜாப்பைக் கண்டிக்கும் நோக்கில் சில பள்ளி மாணவர்கள் காவித்துண்டுடன் பள்ளிக்கு வந்து பிரச்சினை கிளப்பினர். இரு நாட்களுக்கு முன்பு குந்தாபூரில் உள்ள பந்தர்கர்ஸ் கலை இலக்கிய கல்லூரியில் … Read more

சீருடை அரசாணையை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – கர்நாடக முதலமைச்சர் <!– சீருடை அரசாணையை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் – கர… –>

சீருடை குறித்த அரசின் உத்தரவைப் பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனக் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.  கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வரும் மாணவியரை அனுமதிக்கப் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் கருத்தைச் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, தனி மனித உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலேயே சீருடை குறித்த அரசின் உத்தரவு … Read more