ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் – மாநிலங்களவையில் நாளை பிரதமர் உரை

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான ஜனவரி 31 அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  அதன்பின், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் செய்தனர்.  இதற்கிடையே, மக்களவையில் ஜனாதிபதி … Read more

பஞ்சாப்பில் தேர்தல் பிரசாரத்தில் சாதனை; ராகுலின் காணொலி நேரலையை 11 லட்சம் பேர் பார்த்தனர்.! காங். ஊடகப் பிரிவு தகவல்

லூதியானா: பஞ்சாப்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராகுலின் காணொலி நேரலையை 11 லட்சம் பேர் பார்த்தனர் என்று காங்கிரஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று பஞ்சாப் மாநிலம்  லூதியானாவில் காணொலி காட்சி மூலம் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.  கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், இதுபோன்ற காணொலி பிரசார பொதுக்கூட்டம்  நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக  தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை ராகுல்காந்தி அறிவித்தார்.  இந்நிகழ்ச்சிகள் யாவும் பேஸ்புக், … Read more

மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு தலைவலியாகும் ஜாட் அரசியல்: அமித் ஷா முயற்சி வெல்லுமா?

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு முதல் 2 கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்கு மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் ஜாட் சமூகத்தினர் இந்த முறை பாஜக மீது அதிருப்தியில் உள்ள நிலையில், அவர்களை ஈர்க்க கட்சித் தலைமை பகீரத பிரயத்தனம் செய்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் … Read more

திரிபுரா பாஜகவில் களேபரம்.. காங்கிரஸுக்கு தாவும் 2 எம்.எல்.ஏக்கள்.. அதிர்ச்சியில் டெல்லி

திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் சுதீப் ராய் பர்மன், ஆசிஷ் சாஹா இருவரும் கட்சியை விட்டு மட்டுமல்லாமல் தங்களது எம்எல்ஏ பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து சுதீப் ராய் பர்மன் கூறுகையில், இந்த அரசு மக்களுக்கான சேவையிலிருந்து தவறி விட்டது, தோல்வி அடைந்து விட்டது. ஒன்மேன் கட்சியாக இது மாறி விட்டது. எந்த எம்எல்ஏவும், அமைச்சரும் தங்களது கடமையை செய்ய முடியவில்லை. அவர்கள் சொல்வது எதுவும் நடப்பதில்லை. அமைச்சர்களின் உத்தரவுகளை யாரும் மதிப்பதும் இல்லை. மாநிலம் முழுவதும் … Read more

கொரோனா தொற்றுக்கு பிறகு சர்வதேச அளவில் தலைமை பொறுப்பை இந்தியா முன்னெடுக்கும் சூழல் உருவாகி உள்ளது – பிரதமர் <!– கொரோனா தொற்றுக்கு பிறகு சர்வதேச அளவில் தலைமை பொறுப்பை இந்… –>

கொரோனா தொற்றுக்கு பிறகு உலக நாடுகளின் எண்ணிங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, சர்வதேச அளவில் தலைமை பொறுப்பை இந்தியா முன்னெடுக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்து பேசிய அவர், இசையால் அவர் தேசத்தை ஒருங்கிணைத்ததாக புகழாரம் சூட்டினார். இதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஏழைகளுக்கு … Read more

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படையுடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் ராணுவம், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.    இதற்கு பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர். இதையும் படியுங்கள்…வீரர்கள் சவால் விடும் வகையில் விளையாட வேண்டும் – ரோகித் சர்மா

கடந்த 50 வருடங்களில் இப்படிப்பட்ட வளர்ச்சியை யாரும் கண்டது இல்லை; ஏழைகளை லட்சாதிபதியாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.! பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: 2014-2020ல் பணவீக்க விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது என மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் பணவீக்கப் பிரச்சினையை இங்கு எழுப்பியுள்ளன, அவர்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்போதே இந்த விஷயத்தை எழுப்பினால் நன்றாக இருந்து இருக்கும். கொரோன தொற்று காலத்திலும் எங்கள் அரசாங்கம் பணவீக்கத்தை சமாளிக்க முயற்சிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி … Read more

ஹிஜாப் விவகாரம் | கர்நாடகாவில் காவித் துண்டுக்கு எதிராக நீலத் துண்டுடன் கோஷம் எழுப்பிய மாணவர்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலித் மாணவர்கள் நீல நிறத் துண்டை அணிந்து ‘ஜெய் பீம்’ கோஷம் எழுப்பினர். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை … Read more

'ஆட்சி போனாலும் காங்கிரசின் ஆணவம் குறையவில்லை!' – பிரதமர் மோடி ஆவேசம்!

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பறிபோனாலும் அக்கட்சியின் ஆணவம் மட்டும் குறையவில்லை என, நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் , கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 – 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் … Read more

லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல்.. ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு <!– லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும… –>

லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை அவைத் தலைவர் வெங்கைய நாயுடு வாசித்தார். அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தியதை அடுத்து, ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு … Read more