புதிய அதிபருக்கான வாக்கெடுப்பை புறக்கணித்த ஈராக் கட்சிகள்

ஈராக் நாட்டின் ஐந்தாவது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதில், ஷியா முஸ்லிம் மதகுரு மொக்தாதா அல்-சதரின் சத்ரிஸ்ட் இயக்கம் 329 இடங்களில் 73 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக 25 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இதனால், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடைபெற இருந்தது. இந்நிலையில், தொகுதிகளுக்கு இடையே ஆலோசனை நடைபெற்று வருவதால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் … Read more

பஞ்சாப் காங். முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் விலகல்: சட்டப்பேரவை தேர்தலில் காங். முதல்வர் வேட்பாளராக சன்னி அறிவிப்பால் அதிருப்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியலில் இருந்தே விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவித்துள்ளார். சன்னியின் பெயரையே நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்தபோது, மேடையில் சுனில் ஜாக்கர் இருந்தார். பின்னர் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தங்கள் கட்சியில் டெல்லியில் உட்கார்ந்திருக்கும் சிலர், பஞ்சாபில் சீக்கியர் மட்டுமே முதல்வராக வேண்டும் என கட்சி தலைமைக்கு ஆலோசனை … Read more

ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான மிகப்பெரிய சிறப்பு மையத்தை நேற்று முன்தினம் தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் அஸ்வத் நாராயணா பேசும்போது, ” அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) … Read more

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் படுகொலை <!– கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறைய… –>

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் பஜார் லைன் பகுதியில் லட்சுமி என்பவர் கூலி வேலை செய்து வந்தார். சம்பத்தன்று காலை லட்சுமியின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த போது லட்சுமி உட்பட அவரது மகன்கள் மூன்று பேரும் , உறவுக்காரச் சிறுவன் ஒருவன் என மொத்தம் ஐந்து பேர் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது. லட்சுமியின் கணவர் வெளியூர் சென்று … Read more

உருமாறிய அனைத்து கொரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி: இந்திய விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள்

புதுடெல்லி : சீனாவின் உகான் நகரத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று தொடர்ந்து கொரோனா வைரஸ் உருமாறி வருவது அறிவியல் உலகத்தை அதிரவைத்துள்ளது. தற்போது வழக்கில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவின் உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக செயல்படுமா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம், அசன்சோல் காஜி நஸ்ருல் பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசா மாநிலம், புவனேசுவரம் … Read more

மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை

டெல்லி : மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசுகிறார்.அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் அவர் பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஏப்ரல் முதல் அனைத்து பிஎஃப் கணக்குகளும் 2 பாகங்களாக பிரிப்பு

புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட உள்ளன. பிஎஃப் திட்டத்தை பயன்படுத்தி, அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்கள் அதிக தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கி அதன் மூலம் அதிக லாபம் அடைந்துவந்தனர்.இந்தப் போக்கை தடுக்க மத்திய அரசு, ஊழியர் தரப்பிலிருந்து கட்டப்படும் பிஎஃப் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினால், அதன் மூலமான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி … Read more

சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பவில்லை – அமைச்சர் நிதின் கட்காரி <!– சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிர… –>

சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர்,  உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்கள் ஒரு  லட்சம் ரூபாயினை ஆண்டுக்கு 8 சதவீத வட்டியில் வழங்க தயாராக உள்ளனர் என்றார். எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தவிர்த்து நமது சிறிய முதலீட்டாளர்களிடமிருந்தே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தேவையான நிதி திரட்டிக் கொள்ளப்படும் என்று கூறினார். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க தாம் விரும்பவில்லை என்று கூறிய கட்கரி, அதற்கு மாறாக, … Read more

யோகி ஆதித்யநாத் அரசு ஏழைகளின் கோரிக்கையை கேட்பதில்லை : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஏழை, நடுத்தர மக்களின் பேச்சைக் கேட்பதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நொய்டாவின் டூப் பகுதியில் வசிப்பவர்களுக்கு பெரும் அநீதி … Read more

பிரசார கூட்டங்கள் கட்டுப்பாடு தளர்வு

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘பொதுவெளி பிரசார பொதுக் கூட்டங்களில் 30 சதவீதம் பேரும், உள்ளரங்க பிரசாரத்தில் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் பேரும் பங்கேற்கலாம். … Read more