ஜாதியை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன்ஜாமீன்: பஞ்சாப் – அரியானா ஐகோர்ட் உத்தரவு

மும்பை: குறிப்பிட்ட பிரிவினரின் ஜாதியை இழிவுபடுத்தி பேசிய விவகாரத்தில் நடிகை முன்முன் தத்தாவுக்கு இடைக்கால முன் ஜாமீனை பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது. பிரபல ஹிந்தி ‘டிவி’ தொடர் நடிகை முன்முன் தத்தா கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் பல மாநில போலீசாரிடம் … Read more

உ.பி.யின் துறவி முதல்வரான யோகியிடம் 2 துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி சொத்து: வேட்புமனுவில் தகவல்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல்வரான யோகி ஆதித்யநாத்திடன் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். இதனால், உ.பி.யில் ஆளும் பாஜகவின் முதல்வரான யோகி, முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தான் முறை போட்டியிட்டு வென்ற மக்களவை தொகுதியில் அமைந்துள்ள கோரக்பூர் நகர … Read more

தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைப்பு.. தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக்கான கட்டணங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் விதிமுறைகளை மாற்றியுள்ளது. இதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பு இடத்தை பெற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியில் அதிகபட்சமாக 50% … Read more

216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு சமத்துவத்திற்கான சிலையை திறந்த பிரதமர்.! <!– 216 அடி உயர ராமானுஜர் சிலை திறப்பு சமத்துவத்திற்கான சிலை… –>

தெலங்கானா மாநிலத்தில் நிறுவப்பட்ட 216 அடி உயர பிராம்மாண்ட ராமானுஜர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமானுஜரின் பணியில் தமிழுக்கு முக்கிய இடம் உள்ளதாக குறிப்பிட்டார். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில் ‘சமத்துவத்திற்கான சிலை’ என்ற பெயரில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள பீடத்தின் … Read more

எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள்: அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம்- அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அலிகார் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ‘‘எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள். அனைத்து பிரச்சினைகளும் தீரும். சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பற்றி பேசுவோம். அலிகார் மக்கள் பா.ஜனதாவுக்கான கதவை மூடிவிட்டனர். பா.ஜனதாவின் விதிக்குக்கு பூட்டுபோட்டு சீல் வைத்துள்ளனர். மாவ் பகுதியில் நடைபெற்ற என்னுடைய முதல் கூட்டத்தில், லக்னோவில் உள்ள பா.ஜனதாவின் தலைமையகம், மற்றும் … Read more

சூடுபிடிக்கும் பஞ்சாப் தேர்தல் களம்; காங். முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிப்பு: லூதியானாவில் ராகுல் பிரசாரம்

லூதியானா: பஞ்சாப் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, லூதியானாவில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவிக்கவுள்ளார். பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அறிவிப்பதற்கு முன்பு, அக்கட்சி மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதேபோல, அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்று மக்களிடம் காங்கிரஸ் கருத்துக்கணிப்பு எடுத்துவருகிறது. தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. … Read more

கணவரைப் போல நாட்டுக்கு சேவை – கல்வான் தாக்குதலில் உயிர்நீத்த வீரரின் மனைவி 'ராணுவ அதிகாரி' தேர்வில் தேர்ச்சி

சென்னை: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிர்நீத்த மத்தியப் பிரதேச ராணுவ வீரர் நாயக் தீபக் சிங் என்பவரின் மனைவியும், தனது கணவரை போல நாட்டிற்கு சேவை செய்யும் பொருட்டு ராணுவத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார். இதற்காக ராணுவத் தேர்வில் அவர் தேர்ச்சிபெற்றுள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி நள்ளிரவில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவினர். அவர்களை நமது வீரர்கள் தடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 … Read more

விவாகரத்துக்கு காரணம் இதுதான்… முன்னாள் முதல்வரின் மனைவி புது கண்டுபிடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘முன்னாள் முதல்வரின் மனைவி என்பதை மறந்த, ஒரு பெண்ணாக நான் உங்களிடம் பேசுகிறேன். மும்பை மாநகர சாலைகளில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அவற்றில் உள்ள பள்ளங்களால் பொதுமக்கள் தினமும் எவ்வளவு சிரமத்துக்கு ஆளாகின்றனர் என்பதை நானும் அனுபவித்து வருகிறேன். மும்பை மாநகரில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க … Read more

மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே காரணம்-தேவேந்திர பட்னாவிஸின் மனைவி குற்றச்சாட்டு <!– மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கு போக்குவரத்து நெரிசலே கா… –>

மும்பையில் நடக்கும் 3 சதவீத விவாகரத்துக்கு மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதே காரணம் என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் (Devendra Fadnavis) மனைவி குற்றம்சாட்டியுள்ளார். குண்டும் குழியுமான சாலைகளில் பயணிப்பதால் பெரும் அவதிக்கு ஆளாவதாகத் தெரிவித்த அம்ருதா ஃபட்னாவில் (Amruta Fadnavis), போக்குவரத்து நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாததே 3 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்றார். இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த சிவ சேனா துணைத் தலைவர் பிரியங்கா சதுர்வேதி ((Priyanka … Read more

ராமானுஜரின் 216 அடி உயர சிலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி இன்று மாலை சிலையை திறந்து வைத்து நாட்டுடமையாக்குகிறார். வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக்கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த … Read more