சிங்கத்திற்கு உணவளித்த கவர்ச்சி நடிகையின் ‘கணக்கு’ முடக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: சிங்கத்திற்கு உணவளித்த ஒருசில நாளில் நடிகை நோரா ஃபதேஹியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா ஃபதேஹி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்துவார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பதிலளித்தும் வருவார். இந்நிலையில் நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவரது ரசிகர்களால் பார்க்க … Read more

ராமானுஜர் சிலை திறப்பு: பிரதமருக்கு வரவேற்பு; தெலங்கானா முதல்வர் புறக்கணிப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ‘சமத்துவ சிலை’ திறப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்காமல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை … Read more

வாரத்தில் 5 நாட்கள் வேலை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற அறிவிப்புக்கான அரசாணையை, மாநில அரசு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டின் 73வது குடியரசு தினமான கடந்த மாதம் 26 ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநில அரசின் கொள்கை முடிவுகளை, முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்களின் செயல் திறன் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முயற்சியில், மாநில அரசு வாரத்தில் ஐந்து … Read more

3 சதவீத விவாகரத்து போக்குவரத்து நெரிசலால் ஏற்படுகிறது – முன்னாள் முதல்வரின் மனைவி குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: மும்பையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தங்கள் குடும்பங்களுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 3 சதவீத விவாகரத்து ஏற்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போக்குவரத்தில் சிக்கித் தவிப்பதால் நான் தனிப்பட்ட முறையில் சிரமப்பட்டேன். நான் தேவேந்திர பட்னாவிசின் மனைவி என்பதை மறந்துவிட்டு, … Read more

'டிஜிட்டல் விவசாயமே நாட்டின் எதிர்காலம்'!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: இந்தியாவில் டிஜிட்டல் விவசாயமே எதிர்காலமாக இருக்கும்; இதன்மூலம் இளைஞர்கள் சிறப்பான பணிகளைச் செய்ய முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நடப்பு ஒன்றிய பட்ஜெட்டில் இயற்கை மற்றும் டிஜிட்டல் விவசாயங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இக்ரிசாட் நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பாடகர் லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்; வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

மும்பை: கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவிட் தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக … Read more

ராகுல் காந்தியின் பேச்சில் கவனிக்க மறந்த விஷயங்கள்

குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதங்களில் பலர் பேசினார்கள். அவற்றில் பிப்ரவரி 2 அன்று ராகுல் காந்தி பேசியவை முக்கியமானவை. ஆனால் ஊடகங்கள் அக்கருத்துக்களை மலிவுபடுத்தி ஏதோ தெருச்சண்டை போடுவது போலச் செய்தி வெளியிடுகின்றன. சில தேசிய ஊடகங்கள் அவரது முழுமையான பேச்சை வீடியோவாகப் போட்டு பின்னர் ஆளும் கட்சி அழுத்தம் காரணமாக நீக்கிவிட்டன. பாஜக தரப்பு தலைவர்களும் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு தீவிரமான பதிலையோ விவாதங்களையோ முன்னெடுக்கவில்லை. மாறாக இணைய பாஜகவாசிகள் பப்பு … Read more

ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி <!– ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்… –>

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 13 கோடியே 14 இலட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை அண்மையில் வாங்கியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில் தெற்கு மும்பையில் உள்ள மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் அந்தக் கார் இரண்டரை டன் எடையும் 564 பிஎச்பி திறனும் கொண்டது. கரடுமுரடான பாதையிலும் செல்வதற்கு ஏற்றது. 2018இல் அறிமுகமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் அடிப்படை விலை 6 … Read more

திருப்பதியில் 15-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்க ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ந் தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த மாதம், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15-ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச … Read more

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ம.பி.யைச் சேர்ந்த விஜய் பாஹீல் எம்.பி.யின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். சவுதி அரேபியா, கத்தார், யு.ஏ.இ., குவைத், சூடான், மலேசியா, சிங்கப்பூரிலும் இந்திய தொழிலாளர்கள் விபத்துகளில் பலியாகியுள்ளனர். இதேபோல், பஹ்ரைன், ஓமன், அஜர்பைஜான், போர்ச்சுகல், ஈராக், மொரிஷியஸ், ருமேனியா நாடுகளிலும் இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக கத்தார் … Read more