ஆவேசமாகப் பேசிய திரிணமூல் எம்.பி.; அன்புடன் பேசப் பணித்த மக்களவை துணைத் தலைவர்: பின்னர் நடந்தது என்ன?

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முக்கிய உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “மத்திய அரசு, வரலாற்றை மாற்ற நினைக்கிறது. அதற்கு தங்களின் எதிர்காலத்தை நினைத்துப் பயம் வந்துவிட்டது. நிகழ்காலத்தை இந்த அரசு நம்பவில்லை” என்று பேசினார். அவரது பேச்சின் இடையே குறுக்கிட்ட மக்களவை துணைத் தலைவர் ரமா தேவி, “அன்புடன் பேசுங்கள். இவ்வளவு கோபம் வேண்டாம்” என்று கூறினார். அப்போது … Read more

குடியரசு தின அலங்கார ஊர்தி: தேர்தல் கிஃப்ட்… பரிசை தட்டி சென்ற உ.பி.,!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 73ஆவது குடியரசு தினம் கடந்த மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், … Read more

இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள் <!– இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள் –>

இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டும் பனிமழைக்கு இடையிலும் ரயில்வே சேவைகள் நீடிக்கின்றன. ரயில்கள் வெண் பனி போர்த்திய மலைப்பாதைகளில் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. கால்கா சிம்லா இடையே நேற்று ரயில்கள் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்டன. இதே போல் உத்தரகாண்ட்டிலும் கடும் பனிமழை பெய்து வருகிறது. இதனால் கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற உயரமான மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டு கண்ணுக்கு விருந்தளித்தன. சாமோலி என்ற இடத்தில் பனிச்சரிவால் சாலைகள் அடைபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பனியை அகற்றுவதற்காக நீண்ட வரிசை கட்டி … Read more

ராமானுஜரின் 216 அடி உயர சிலை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

ஐதராபாத்: ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது.  வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா … Read more

சிறையில் சொகுசு வசதி சசிகலா, இளவரசி உட்பட 6 பேர் குற்றவாளியாக சேர்ப்பு

பெங்களூரு:  சொத்து குவிப்பு வழக்கு தண்டனை காலத்தில் பெங்களூரு சிறையில் இருந்தபோது, சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சத்தை சிறை அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சசிகலா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், குற்றத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  இதற்கிடைபோலீசார் குற்றப்பத்திரிக்கையில், முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், 2வது குற்றவாளியாக சிறை அதிகாரி ஆர்.அனிதா, … Read more

சிறையில் உள்ள கணவனுக்கு சிறப்பு சலுகை தர சிறை அதிகாரியிடம் பேரம் பேசிய பப்ஜி மதன் மனைவி?

ஆபாசமான வீடியோக்கள் பதிவிட்ட பப்ஜி மதன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள கணவனுக்கு அங்கே சிறப்பு சலுகைகளுடன் சொகுசு வாழ்க்கைக்காக சிறை அதிகாரியிடம் பேரம் பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ளா ஆடியோவில் நான் கிருத்திகா என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் பெண், கொரோனா இல்லாம  அவரை நல்லாப் பாத்துக்கோங்க. நான் பணம் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன். 3 லட்சம் என்பதால் கொஞ்சம் லேட் ஆகுது என்று கூறுகிறார். மறுமுனையில் உள்ள நபர் … Read more

வரும் 7 ஆம் தேதி மூன்று நாள் பயணமாக டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழ்நாடு எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் தொடர்பாக, இன்று தமிழ்நாடு அரசு சட்டமன்ற அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த சூழலில் ஆளுநர் … Read more