4.99% எல்ஐசி பங்குகளை விற்க செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்: அரசு செயலாளர் தகவல்
புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தில் உள்ள 4.99 சதவீத பங்குகளை விற்பதற்கு, செபியிடம் ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறை செயலாளர் துகிஜ் காந்தா பாண்டே கூறியுள்ளார். எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான நடைமுறைகள் விரைவில் துவங்கும் என, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியிருந்தார். இந்நிலையில், எல்ஐசி பங்குகளை விற்பதற்கான வரைவு அறிக்கை செபியிடம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. … Read more