திருமண வரவேற்பில் மணப்பெண் மூளைச்சாவு.. உறுப்புதானம் செய்த பெற்றோர்!

கர்நாடகத்தில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து , வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது புதுமணப் பெண் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் பரிசோதித்தபோது அவர் மூளைச் சாவடைந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள், தங்களது மகளினின் உடல் உறுப்புகளை தானம் செய்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் அந்தப் பெண்ணின் பெற்றோரை வெகுவாக பாராட்டியுள்ளார். மக்களுக்கு … Read more

ஒரு பெட்டி மாம்பழத்தை 31,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பழ வணிகர்… சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்குமாம்.. <!– ஒரு பெட்டி மாம்பழத்தை 31,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பழ வண… –>

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வணிகர் ஒருவர் ஒரு பெட்டி மாம்பழத்தை 31ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். மாங்காய் காய்ப்பு தொடங்கியதும் சந்தைக்கு வரும் முதல் பெட்டியை ஏலம் எடுத்தால் செல்வம் கொழிக்கும் என்கிற நம்பிக்கை புனே வணிகர்களிடையே உள்ளது. இதனால் ரத்தினகிரி மாவட்டத்தில் இருந்து புனே சந்தைக்கு வந்த ஹாபுஸ் வகை மாம்பழங்கள் 60 எண்ணம் கொண்ட ஒரு பெட்டியை யுவ்ராஜ் கச்சி என்கிற வணிகர் 31 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். இதேபோல் வெவ்வேறு விலைகளில் … Read more

சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நாடகம் மீண்டும் ஒளிபரப்பு- கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்கை வரலாற்று இசை நாடகத்தை ஒளிபரப்ப டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் முதல்முறையாக அம்பேத்கரின் வாழ்க்கையை அனைத்து குழந்தைகளின் மத்தியிலும் கொண்டு சேர்க்கும் விதத்தில் டெல்லி அரசு முயற்சி எடுத்துள்ளது. நாடகத்தை மொத்தம் 50 முறை ஒளிபரப்பப்படும் என்றும் மக்கள் அனைவரும் இலவசமாக காண வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 4-ம் … Read more

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டாம் : ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்!

டெல்லி : ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என ஒன்றிய அரசு கேட்டு கொண்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிலையங்களுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி சில நாடுகளும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளன. இதனை குறிப்பிட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் … Read more

இந்தியாவில் 50 ஆயிரத்திற்கு குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு – முழு விவரம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சரிந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஜனவரி மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது நாளுக்கு நாள் மளமளவென குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 67 ஆயிரத்து 84 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 77 ஆக சரிந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 50,407 பேருக்கு தொற்று … Read more

உ.பி. தேர்தல்; 8000 வாகனங்களை கையகப்படுத்திய தேர்தல் ஆணையம்: பாஜக எம்எல்ஏ, அமைச்சர்களின் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு?

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வாக்குப்பதிவுகளுக்காக மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் சுமார் 8000 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சொந்தமான வாகனங்களை எடுக்க வேண்டாம் என ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பாஜக ஆளும் உ.பி.யில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்குப்பதிவுப் பணிகளின் போக்குவத்திற்காக பல ஆயிரம் வாகனங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, தனியார்களின் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 8000 கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 1000 … Read more

Hijab row: தேவையில்லாமல் பேசக் கூடாது.. உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை

இந்தியாவின் ஹிஜாப் பிரச்சினை உள்நாட்டு விவகாரம். அது குறித்து உள்நோக்கத்துடன் கூடிய கருத்துக்களைக் கூறக் கூடாது என்று உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதை சில கல்லூரிகள் தடை செய்தன. இதையடுத்து அந்த மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு எதிராக இந்துத்வா மாணவர்களும் காவித் துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டத்தில் குதித்தனர். இவர்களை எதிர்த்து தலித் மாணவர்கள் நீலத் துண்டுடன் போராட்டத்தில் ஈடுபடவே நிலைமை மோசமானது. … Read more

பாட்டிலுக்குள் லதா மங்கேஷ்கரின் உருவப்படத்தை பதித்து மினியேச்சர் கலைஞர் அஞ்சலி <!– பாட்டிலுக்குள் லதா மங்கேஷ்கரின் உருவப்படத்தை பதித்து மினி… –>

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தை சேர்ந்த புகழ் பெற்ற மினியேச்சர் கலைஞர் ஈஸ்வர ராவ், மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் படத்தை பாட்டிலுக்குள் உருவாக்கி அஞ்சலி செலுத்தியுள்ளார். கண்ணாடித் துண்டுகள், காகிதங்கள் வெட்டி அதை பாட்டிலுக்குள் செலுத்தி லதா மங்கேஷ்கரின் உருவத்தை அவர் பாட்டிலுக்குள் பதித்துள்ளார்.  லதா மங்கேஷ்கரின் மிகப்பெரிய ரசிகரான தாம் அவர் மறைவால் வருந்துவதாகவும் லதா பாடிய பாடல்கள் என்றும் மறையாது என்றும் ஈஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.  Source link

திருமண மேடையில் மூளைச்சாவு: மணப்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோருக்கு குவியும் பாராட்டு

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம்  ஸ்ரீநிவாஸ்பூரில் சைத்ரா (25) என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சைத்ராவும், மணப்பெண்ணும் மேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, சைத்ரா திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். மூச்சுப் பேச்சற்று கிடந்த சைத்ராவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சைத்ரா மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சைத்ராவின் பெற்றோர் கதறி அழுதனர். பின்னர், சைத்ராவின் உடல் … Read more

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்: ஒன்றிய அரசு

டெல்லி: ஹிஜாப் விவகாரம் தொடர்பாக உள்நோக்கம் கொண்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி கருத்துக்கள் எப்போதும் ஏற்கப்படாது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.