பிரதமர் பதவியிலிருந்து மோடியை விரட்டியடிப்பேன்.. திடீர் ஆவேசமான முதல்வர்!

பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை விரட்டியடிப்பேன் என்று தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் ஆவேசமாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறு யாருமல்ல, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்தான் (கே.சி.ஆர்). ஜாங்கோன் மாவட்டம் யஷ்வந்த்பூரில் நடந்த கூட்டத்தில் கே.சி.ஆர். பேசினார். அப்போது அவர் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். கே.சி.ஆர். பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆதரவு தர வேண்டும். அப்படித் தரத் தவறினால் பிரதமர் நரேந்திர மோடி அவரது … Read more

இந்தியாவில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா உறுதி.. 804 பேர் பலி <!– இந்தியாவில் புதிதாக 50,407 பேருக்கு கொரோனா உறுதி.. 804 பே… –>

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக 50 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்றுக்கு 804 பேர் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் 3 புள்ளி 48 சதவீதமாக குறைந்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் 6 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு … Read more

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு- சசிகலா, இளவரசி 11-ந்தேதி ஆஜராகுமாறு சம்மன்

பெங்களூரு: கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் தண்டனை காலம் முடிந்து கடந்த ஆண்டு விடுதலையாகினர். இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை … Read more

சென்னை – பெங்களூரு – மைசூர் இடையே புல்லட் ரயில் : வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!!

டெல்லி : சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் புல்லட் ரயில் குறித்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் மொத்தம் 7 புல்லட் ரயில் வழித்தடங்களை அமைப்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 7 வழித்தடங்களில் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரையிலான … Read more

செல்போன் செயலிகள் மூலம் லோன் வாங்க வேண்டாம்- காவல்துறை எச்சரிக்கை !

அவசர தேவைக்காக கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகள் மூலம் லோன் பெற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் அலைபேசி செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்யும் மோசடி கும்பல் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அதுபோன்ற செயலிகளை, ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ப்ளே ஸ்டோர் மற்றும் இணையத்தளங்களில் அதேபோன்ற கடன் … Read more

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

பொன்னேரி அருகே தேங்காய் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் வசந்த். இவரது இளைய மகன் மூன்றரை வயதான மகன் சஞ்சீஸ்வரன். இந்நிலையில், நேற்று காலை பெற்றோர் கவனிக்காத நேரத்தில் வீட்டிலிருந்த தேங்காயை சஞ்சீஸ்வரன் சாப்பிட்டுள்ளார். அப்போது, தேங்காய் துண்டொன்று சிறுவனின் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால், சிறுவனுக்கு மூச்சுத்திணறியது. மேலும் சிறுவன் மூச்சு திணறி துடிப்பதை கண்டு உறவினர்கள் பழவேற்காடு … Read more

மக்களிடம் கொள்ளையடிப்பது காங்கிரஸ் கொள்கை: மோடி குற்றச்சாட்டு

அல்மோரா: மக்கள் எல்லோரையும் பிரித்து, கூட்டாக கொள்ளையடிப்போம் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார். உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இம்மாநிலத்தின் அல்மோரா நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் எப் … Read more

பெண்கள் விடுதலைபெற வேண்டும்,சிறைப்படுத்திக் கொள்ளக் கூடாது – ஹிஜாப் குறித்து கங்கனா ரணாவத் கருத்து <!– பெண்கள் விடுதலைபெற வேண்டும்,சிறைப்படுத்திக் கொள்ளக் கூடாத… –>

பெண்கள் விடுதலையாவதை கற்றுக்கொள்ள வேண்டும், கூண்டுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் கல்லூரியில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரத் தடைவிதிக்கப்பட்டதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. இப்பிரச்சினை குறித்து சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரணாவத், ஈரானில் 50 ஆண்டுகளில் பெண்களுக்கு புர்கா முதல் பிகினி வரை உடை விஷயத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்த மற்றொரு பதிவரின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார். பெண்கள் … Read more

ராகுல், பிரியங்காவை கிண்டலடித்த நிதி மந்திரி: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி : பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பாராளுமன்ற மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2013-ம் ஆண்டு, அலகாபாத்தில் வறுமை என்பது ஒரு மனநிலை என கூறியதாக கேலி செய்தார். இதுபற்றி காங்கிரசாரைப் பார்த்து நிர்மலா சீதாராமன் கூறும்போது, ‘‘உங்கள் முன்னாள் தலைவர் வறுமை என்றால் உணவு, பணம் அல்லது பொருள்பற்றாக்குறை என்று அர்த்தம் அல்ல. ஒருவருக்கு தன்னம்பிக்கை இருந்தால் … Read more

ஒரே நாளில் 58,000 பேர் பாதிப்பு: அதிவேகத்தில் சரியும் கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு படுவேகமாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 58,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். ஒமிக்ரான் எனும் புதுவகை வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா 3வது அலை ஏற்பட்டது. இது வேகமாக பரவக் கூடிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அதே போல், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போ்ல் இந்தியாவிலும் கடந்த மாதம் கொரோனா தொற்று படுவேகமாக அதிகரித்தது. தினசரி தொற்று மீண்டும் 2 லட்சத்தை … Read more