நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் தொடர் நிறைவு: காங்., திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதில், கடந்த 1ம் தேதி 2022-23ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, இரு அவையிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்றது. இந்நிலையில், நேற்றுடன் பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதில், புதிதாக எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்ததாக, … Read more

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலியாக டெல்லி பல்கலை.யில் 4 தமிழ்ப் பேராசிரியர் நியமனம்: தமிழக தலைவர்கள் வலியுறுத்தலுக்கு பலன்

புதுடெல்லி: ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, டெல்லி பல்கலைக்கழகத்தில் 4 தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை மற்றும் உயர்க் கல்வி ஆகியவை போதிக்கப்படுகின்றன. தமிழ்த் துறையில் 5-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஓய்வு பெற்றும் அப்பணியிடங்கள் 10 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதுகுறித்த செய்தி தொடர்ந்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகி வருகிறது. கடைசியாக கடந்த டிசம்பர் 20-ம் தேதி … Read more

"கேரளா போல மாறி விடும்".. வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் யோகி!

உத்தரப் பிரதேச மக்கள் தவறு செய்தால், நமது மாநிலம் கேரளா போல, காஷ்மீர் போல, மேற்கு வங்காளம் போல மாறி விடும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையாகியுள்ளது. பல்வேறு தலைவர்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உ.பி. மக்கள் வாக்களிக்கும்போது தவறு செய்து விடக் கூடாது. அப்படி தவறு … Read more

கிரிப்டோகரன்சி வருமானத்துக்கு வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் <!– கிரிப்டோகரன்சி வருமானத்துக்கு வரி விதிக்க அரசுக்கு உரிமை … –>

கிரிப்டோகரன்சிகள் மீதான வருமானத்துக்கு வரி விதிப்பதால் அதற்குச் சட்டப்படியான அங்கீகாரம் அளித்ததாகக் கருத முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கிரிப்டோகரன்சி தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், கிரிப்டோகரன்சி மீதான வருமானத்தின் மீது வரி விதிக்க அரசுக்கு உரிமை உள்ளது என்றார். இப்போதுள்ள நிலையில் கிரிப்டோகரன்சியைச் சட்டப்படியானதாக அறிவிக்கவோ, தடைசெய்யவோ போவதில்லை என்றும், உரிய ஆலோசனைக்குப் பின் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கிரிப்டோகரன்சி மீதான … Read more

பகவத்கீதை வினாடி-வினா போட்டியில் முஸ்லிம் மாணவி முதலிடம்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் எட்யூட்டர் செயலி அகில இந்திய அளவில் பகவத்கீதை வினாடி-வினா போட்டியை நடத்தியது. இந்த போட்டியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி குஷ்புகான் முதலிடத்தை பிடித்தார். அவரது தந்தை அப்துல்கான் ஒரு தொழிலாளி ஆவார். பகவத்கீதை வினாடி- வினா போட்டியில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி குஷ்பு கூறியதாவது:- எனது குடும்பத்தினரும், ஆசிரியர்களும் பகவத் கீதை போட்டியில் பங்கேற்க ஊக்குவித்தார்கள். பிற மதங்களின் இதிகாசங்களை பற்றி அதிகம் தெரிந்து … Read more

சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சம்; சசிகலா, இளவரசி ஆஜராக சம்மன்: நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: சொத்து  குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு அடைக்கப்பட்டனர். சசிகலாவும், இளவரசியும் தண்டனை காலம் முடிந்து கடந்தாண்டு விடுதலையாகினர். இந்நிலையில், சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு ₹2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் இருவரும் சிக்கினர். இது தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக போலீஸ் அதிகாரி கிருஷ்ண குமார், 2வது குற்றவாளியாக டாக்டர் அனிதா, 3வது குற்றவாளியாக சுரேஷ், 4வது … Read more

பிப்ரவரி 24-ம் தேதி நேரில் ஆஜராக விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

புதுடெல்லி: வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 2017-ம் ஆண்டு மே மாதம் அவர்மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு பல முறை உத்தரவு பிறப்பித்தது. தற்போது இதுவே கடைசி வாய்ப்புஎன்றும் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடியவர் விஜய் மல்லையா. இவரை … Read more

நடு இருக்கைகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!

இனி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. பொதுவாக காரில் பயணிப்பவர்கள் வாகன ஓட்டுநர், ஓட்டுநர் அருகே அமர்ந்திருப்பவர் பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களில் இருவர் மட்டுமே மும்முனை என்று சொல்லப்படும் த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட் அணிய முடிகிறது. பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு விமானங்களில் பயன்படுத்துவது போல இடுப்பில் பொருத்தப்படும் இருமுனை சீட் பெல்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் … Read more

புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை தேடி வரும் போலீசார் .! <!– புதுச்சேரியில் திமுக பிரமுகர் வீட்டு முன்பு நாட்டு வெடிகு… –>

புதுச்சேரியில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான இருதயராஜ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக தேர்தல் பணியை மேற்கொண்டவர். மாலை நான்கரை மணியளவில் மர்ம நபர் ஒருவன், நாட்டு வெடிகுண்டை இருதயராஜ் வீட்டு வாசலில் வீசியுள்ளான். குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்த நிலையில், இருதயராஜ் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்ததால் அசம்பாவிதங்கள் … Read more

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கு பதிவு இல்லை – மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு  எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தெரிவித்துள்ளதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட குற்றங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தொகுத்து வெளியிடுவதாகவும், அதன்படி 2020-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 3,71,503 ஆகும். இவற்றில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 496 ஆகும்.  குடும்ப … Read more