நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு – தேசிய குற்ற ஆவண காப்பகம் சொல்வதென்ன?

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட 11 புள்ளி 8 சதவிகிதம் அதிகம். 2020-ல் பதிவான 50 ஆயிரத்து 35 வழக்குகளில், 30 ஆயிரத்து 142 வழக்குகள் … Read more

நேரு பிரதமராக இருந்தபோதுதான் கல்வான் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியை இழந்தோம்: லடாக் பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியதாவது: மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக உள்ளது. குறிப்பாக, சீனா மற்றும் திபெத் எல்லையில் வடக்கு பகுதியில் கிராமங்களை முன்னேற்ற, துடிப்பான கிராமம் திட்டம் மூலம்பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நான் திபெத், சீனா,பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள பகுதியான லடாக்கை சேர்ந்தவன். அங்கு எப்போதும் பதற்றம் நிலவுகிறது. இந்தப் பகுதியை காங்கிரஸ் அரசுகள் பின்தங்கிய பகுதியாகவே … Read more

அடுத்து நம்ம ஆட்சி தான் – அடித்து சொல்லும் ராகுல் காந்தி!

கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார். கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் கூட பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் பரிதவித்தது. இதை அடுத்து சுயேட்சைகள் மற்றும் இதரக் … Read more

ஜம்மு காஷ்மீர் – பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் பணியில் இருந்த போலீசார் மீது திடீரென கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.   இந்த தாக்குதலில் படுகாயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 4 போலீசாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.   பயங்கரவாதிகள் நடமாட்டத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்…இளவரசர் … Read more

காரைக்குடி – கன்னியாகுமரி இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டம் சாத்தியமற்றது; மக்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல்

டெல்லி: காரைக்குடி – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. காரைக்குடி – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். … Read more

‘எதையும் செய்யாத மோடி வெற்றி பெறுவோம் என்பது வேடிக்கை‘ -வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, பிப்ரவரி 10-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சூடுபிடிக்கும் 5 மாநில தேர்தல்கள்… வெற்றி நிச்சயம் எனக்கூறும் பிரதமர்… மக்கள் யார் பக்கம்?’ எனக் … Read more

’’வறுமையை வெறும் மனநிலை என்றவர்தானே!” – மாநிலங்களவையில் ராகுல் காந்தி மீது நிர்மலா சீதாராமன் விளாசல்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நடைபெற்ற பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பெயரை நேரடியாகச் சுட்டிக்காட்டாமல் கடுமையாக விமர்சித்துள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2022-23 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஏழை மக்களைப் புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடிய நிலையில், மாநிலங்களவையில் இன்று பதிலுரை ஆற்றிய நிர்மலா சீதாராமன், 2013-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பேசியதை மேற்கோள் காட்டினார். அவர் பேசும்போது, “உங்களுடைய முன்னாள் தலைவர் இதே அவையில் 2013-ல் பேசும்போது வறுமை என்பது உணவு, … Read more

மோடிக்கும் குழந்தை பிறக்கட்டும்.. குடும்ப அரசியலை நடத்தட்டும்.. சொல்கிறார் லாலு

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், பிரதமர் நரேந்திர மோடியும் குழந்தை பெற்றுக் கொண்டு குடும்ப அரசியலை நடத்த கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்று முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். குடும்ப அரசியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது சாடியிருந்தார். இந்தியாவில் குடும்பத்தோடு அரசியலில் இருக்கும் தலைவர்களில் லாலுவும் ஒருவர். இவர் முதல்வராக இருந்தார். பின்னர் இவரது மனைவி ராப்ரி தேவி முதல்வரானார். இவரது … Read more

'உத்தரவுகளுக்கு இடைக்கால தடை கிடையாது' – ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம் <!– 'உத்தரவுகளுக்கு இடைக்கால தடை கிடையாது' – ஹிஜாப் வழக்கில் … –>

ஹிஜாப் விவகாரம் குறித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தேசிய அளவில் பெரிதாகக் கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை மாணவர்கள் அணியக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு நிறைவு – மாநிலங்களவை மார்ச் 14 வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக கடந்த ஜனவரி 31-ம் தேதி பாராளுமன்றம் கூடியது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இன்று மாநிலங்களவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை மார்ச் 14-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என துணை சபாநாயகர்  அறிவித்தார். அடுத்த மாதம் … Read more