“மத்திய பட்ஜெட், `இந்தியா 100’ என்ற இலக்கில் தயாரிக்கப்பட்டது”-அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த 2008-09 ம் நிதியாண்டில் குறைவான பொருளாதார நெருக்கடியின்போது, பணவீக்கம் 9.1 சதவிகிதமாக இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அது 6.2 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிலையான, நீடித்த பொருளாதார மீட்சியை பட்ஜெட் நோக்கமாக கொண்டிருக்கிறது. ட்ரோன்கள் மூலம் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் முடிவு நாட்டின் விவசாயத் துறையை நவீனப்படுத்தும் கருவியாக … Read more

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல் உ.பி. மாறினால்…’ – யோகிக்கு பதிலடிகளுடன் அணிவகுத்த தலைவர்கள்

’காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம் போல உத்தரப் பிரதேச மாறிவிடும்’ என்று பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா எனப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில மக்களுக்கு வீடியோ மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது, “கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசு, உங்கள் நம்பிக்கையை மனதில் வைத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அர்ப்பணிப்புடன் … Read more

பார்த்துட்டே இருங்க.. காவிக்கொடிதான்.. தேசியக் கொடியாகப் போகுது.. பாஜக தலைவர் பரபர பேச்சு

பார்த்துக் கொண்டே இருங்கள். எதிர்காலத்தில் காவிக்கொடிதான் இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்கும் என்று கர்நாடக மூத்த பாஜக தலைவரும், அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட் வரை இந்த விவகாரம் போயுள்ளது. இந்த நிலையில், தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல பேசியுள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், அமைச்சருமான கே.எஸ். ஈஸ்வரப்பா. ஷிமோகாவில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் இந்துத்வா … Read more

பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல் காந்திக்கு வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் கண்டனம் <!– பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல் காந்த… –>

பண்பாடுகளின் ஒன்றியம் இந்தியா எனத் தெரிவித்த ராகுல்காந்தி வடகிழக்கு மாநிலங்களை விட்டுவிட்டதை அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் கண்டித்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கேரளம் போல் ஆகிவிடும் என யோகி ஆதித்யநாத் கூறியதற்கு டுவிட்டரில் பதிலளித்த ராகுல்காந்தி, காஷ்மீர் முதல் கேரளம் வரையும், குஜராத் முதல் மேற்கு வங்கம் வரையும் உள்ள பண்பாடுகளின் ஒன்றியமான இந்தியா அழகானது எனத் தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்துள்ள திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அழகான வடகிழக்கு மாநிலங்களை ராகுல்காந்தி மறந்து விட்டதாகவும், தாங்களும் … Read more

தொடர்ந்து உயராமல் இருக்கும் பெட்ரோல்-டீசல் விலை: நாளை சதத்தை தொடுகிறது

புதுடெல்லி: பெட்ரோல்-டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாறுதல் செய்து நிர்ணயிக்கும் அதிகாரத்தை பெற்று உள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொருத்து இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் நிறுவனம் ஆகியவை பெட்ரோல்-டீசல் விலையை மாற்றம் செய்யும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் மிக அதிகமாக அதிகரித்தது. முக்கிய நகரங்களில் 100 ரூபாயை கடந்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டன. தொடர்ந்து தினமும் … Read more

குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டம் நாளை திறப்பு!: பொதுமக்கள் பார்வையிட அனுமதி..ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள முகல் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள வரலாற்று புகழ்மிக்க முகல் கார்டனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று திறந்து வைத்தார். வண்ண வண்ண விதவிதமான மலர்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 11 வகையான துலிப் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும் காற்றை தூய்மைப்படுத்தக்கூடிய தாவரங்களும் இந்த தோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இந்த மலர் … Read more

அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவன ராக்கெட் சோதனை தோல்வி

அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏவிய முதலாவது ராக்கெட் சோதனை தோல்வியில் முடிந்தது. ஆஸ்ட்ரா என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட விண்வெளி ஆய்வு நிறுவனம், BIG FLORIDA என்ற பெயரில் 4 சிறிய செயற்கைக்கோள்களுடன் கேப் கார்னிவல் விண்வெளி மையத்தில் இருந்து 43 அடி உயர ராக்கெட்டை விண்ணில் ஏவியது. <blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>We experienced an issue in today's flight. I'm deeply sorry we were not able to deliver our … Read more

இந்தியாவில் புதிதாக 58,077 பேருக்கு கரோனா: நாட்டில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 171.79 கோடியாக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 58,077 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 3.89% என்றளவில் சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற … Read more

இலவச தரிசன டிக்கெட்… ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!

வைணவ திருத்தலங்களில் உலக அளவில் பிரபலமான கோயில்களில் முக்கியமான திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பக்தர்கள் திருப்பதிக்கு வந்து செல்வதற்கு ஆந்தி மாநில அரசும், தேவஸ்தான நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை அவ்வப்போது விதித்து வந்தன. முக்கியமாக பக்தர்கள் ஒரே இடத்தில் குவிவதை தவிர்க்கும் பொருட்டு, இலவச தரிசன டிக்கெட்டுகளும், கட்டண தரிசன டிக்கெட்களை போன்று ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தன. இந்த … Read more

மனநலம் பாதித்த மூதாட்டியை தர தரவென இழுத்துச் சென்று தாக்கிய மாணவர் கைது <!– மனநலம் பாதித்த மூதாட்டியை தர தரவென இழுத்துச் சென்று தாக்க… –>

திருப்பதியில் மனநலம் பாதித்த மூதாட்டியை சாலையில் தர தரவென இழுத்துச் சென்று கல்லூரி மாணவர் தாக்கும் வீடியோ வெளியான நிலையில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். ரங்கா ரெட்டி மாவட்டம் ஷாத் நகரில் சாலையில் காயங்களுடன் இருந்த மூதாட்டியிடம் பொது மக்கள் விசாரித்த போது இளைஞர் தாக்கியது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த மக்கள், இளைஞரை தாக்கும் வீடியோவை கொண்டு போலீசில் புகாரளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அதேபகுதியை சேர்த கல்லூரி மாணவர் … Read more