கார்களில் நடு இருக்கைக்கும் மும்முனை சீட் பெல்ட் கட்டாயம்

காரின் பின் இருக்கையில் நடுவில் அமருவோருக்கும் சீட் பெல்ட் அமைக்க வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கார்களில் முதல் வரிசையில் இரண்டு இருக்கைகள் மற்றும் பின்வரிசையில் இரண்டு ஓர இருக்கைகளுக்கு மும்முனை சீட் பெல்ட் வசதி வழங்கப்படுகிறது. பின்வரிசைகளில் நடுஇருக்கைகளுக்கு விமானங்களில் இருப்பதுபோல இருமுனை சீட் பெல்ட் ஒதுக்கப்படுகிறது. இனி, நடுஇருக்கைகளுக்கும் மும்முனை சீட்பெல்ட் அமைப்பதை வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். … Read more

அமெரிக்கா உட்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இனி 7 நாள் கட்டாய தனிமை இல்லை: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமல்

புதுடெல்லி: அமெரிக்கா உட்பட 72 நாடுகளில் இருந்து வருவோருக்கு இனி 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அவ்வப்போது விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் சில நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவியது. … Read more

டெஸ்லாவை வரவேற்கிறோம்; ஆனால்…; வேண்டுகோள் விடுத்த மத்திய அமைச்சர் நிதி கட்கரி!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவமனமாக உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அவரது நிறுவனத்தை இந்தியாவில் அமைக்க எலான் மஸ்க் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் இந்திய பிரிவுக்கான பெயரை பதிவு செய்தது அவரது நிறுவனம். மேலும், டெஸ்லா தனது ஏழு கார்களுக்கு இந்தியாவின் சோதனை நிறுவனங்களிடமிருந்து ஒப்புதலையும் பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதாக எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்தார். டெஸ்லா … Read more

இந்தியாவில் ஊடுருவிய 8 பாகிஸ்தான் மீனவர்கள்.. 30 மணி நேரமாக தேடுதல் வேட்டை <!– இந்தியாவில் ஊடுருவிய 8 பாகிஸ்தான் மீனவர்கள்.. 30 மணி நேரம… –>

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் அடுத்தடுத்து 11 மீனவர் படகுகள் இந்திய நீர்பரப்பில் ஊடுருவியதை டிரோன் மூலம் கண்டுபிடித்த எல்லைப் பாதுகாப்பு படையினர் மறைந்து இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களைப் பிடிக்க சிறப்பு கமாண்டோ படையினரை இந்திய விமானப் படையின் உதவியுடன் ஆற்றங்கரையில் மூன்று இடங்களில் களமிறக்கினர். 30 மணி நேரமாக ஹராமி நலா எனுமிடத்தில் தேடுதல் வேட்டையில் எல்லைப் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு மறைந்துள்ள 8 பாகிஸ்தானிய மீனவர்கள் தப்பிச் செல்ல வழியே இல்லை … Read more

‘ஹிஜாப்’ விவகாரத்தில் பா.ஜனதா அரசு தோல்வி: குமாரசாமி குற்றச்சாட்டு

பெங்களூரு : பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் இந்த ஹிஜாப் விவகாரம் தொடங்கியது. இந்த விவகாரம் குறித்து இன்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் மோதலுக்கு வழிவகுத்து கொடுத்துள்ளன. இந்த மோதல்கள் தனியார் கல்லூரிகளில் நடக்கிறதா?. பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள். பா.ஜனதா தலைவர்களின் குழந்தைகள் யாரும் காவி கொடியை பிடித்து போராடவில்லை. அப்பாவி குழந்தைகளை … Read more

கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய வாலிபர் மீது வழக்கு கிடையாது: தாயின் வேண்டுகோளை ஏற்றது கேரளா

திருவனந்தபுரம்:  கேரள மாநிலம்,  பாலக்காடு அருகே மலம்புழா செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23). தனது  நண்பர்கள் 4 பேருடன்  கும்பாச்சி என்ற மலைக்கு கடந்த 7ம் தேதி சாகசப் பயணம்  சென்றார். அப்போது  பாபு எதிர்பாராமல் கால் வழுக்கி விழுந்த போது பாறை இடுக்கில் சிக்கிக்  கொண்டார். காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் கீழே இறங்கி வர முடியவில்லை. ராணுவம், விமானப் படை வீரர்கள் மிகவும் நேற்று முன்தினம் அவரை மீட்டனர். தற்போது அவர் பாலக்காடு … Read more

'தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு நிலையங்கள் எத்தனை? – மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் 890 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இதுவரை தமிழகத்தில் 69 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 8,181 இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த ஆண்டு வரை 3,628 நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இந்தியாவுக்கு எதிராக பொய் செய்தி; 60-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியதாவது: கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதேநேரம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக பொய்யான செய்திகள் வெளியிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கடந்த 2 மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிட்ட யூடியூப் உள்ளிட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் … Read more

இனி 12 மணி நேரம் வேலை? அரசு ஊழியர்களுக்கு ஷாக்!

இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களிலும் தினமும் 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் 6 நாட்கள் வேலை முறை அமலில் உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை செய்து வருகிறார்கள். இதனிடையே, தொழிலாளர்களுக்கான 4 சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடந்த 2019ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இந்த புதிய ஊதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு … Read more

அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டம், குளிர் இருக்கும் – வானிலை ஆய்வு மையம் <!– அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில… –>

அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடும் பனிமூட்டமும் குளிரும் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிட்ட தட்ட அனைத்து வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலையில் சரிவு காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி உத்தரப்பிரதேசம் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலையிலும் நள்ளிரவிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 2 நாட்களுக்கு … Read more