முதல்கட்டமாக 58 தொகுதிகளில் அமைதியாக நடந்த தேர்தல்; உ.பி.யில் 60.17% வாக்குகள் பதிவு: நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 58 தொகுதிகளில் நேற்று அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் சராசரியாக 60.17 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்.10-ம் தேதி (நேற்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. … Read more

மோடியைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருது.. நக்கலடிக்கும் ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து நான் கொஞ்சம் கூட பயப்படவில்லை. மாறாக அவரது பிடிவாத குணத்தைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி , நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். அதேபோல ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கும் ஒரு விரிவான பேட்டி அளித்திருந்தார். அனைத்திலும் அவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருந்தார். ராகுல் காந்தி லோக்சபாவுக்கு சரியாக வருவதில்லை, விவாதங்களை சரியாக கவனிப்பதில்லை என்றும் பிரதமர் … Read more

இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது – பிரதமர் மோடி <!– இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது … –>

இஸ்லாமிய பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சஹரன்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதியான முத்தலாக் நடைமுறையை ஒழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.  பாஜகவிற்கு இஸ்லாமிய பெண்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகள் தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும் பிரதமர் மோடி … Read more

திருப்பதியில் 16ந் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் – பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை

திருமலை: உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  மேலும் திருப்பதி ஏழுமலையான் தரிசிக்க 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் இலவச தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டது.  இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரணப் … Read more

காவிரி ஆணையம் இன்று கூடுகிறது

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின்  கூட்டம் நடத்த கடந்த டிசம்பர் மாதம் இரண்டு முறை அறிவிக்கப்பட்டும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆணையத்தின் 15வது கூட்டம்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.அதில், தமிழகம் உட்பட கேரளா, புதுவை, கர்நாடகா ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்டு நீர் புள்ளி விவரங்கள் மற்றும் முல்லைப் பெரியாறு, மேகதாது ஆகியவை குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பதி: வாகன சோதனையில் சிக்கிய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள்

திருப்பதி அருகே பாக்கராபேட்டை மலைப்பாதையில் வாகன சோதனையில் ₹10 லட்சம் மதிப்பிலான 25 செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்கராபேட்டை வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி மலைப்பாதை வழியாக கடத்தப்படுவதாக பாக்கராபேட்டை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த மலை பாதையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த பொலிரோ வாகனத்தை மடக்கியபோது, அது நிற்காமல் சென்றது. இதையடுத்து சற்று தூரத்தில் அந்த வாகனத்தில் இருந்து சிலர் … Read more

‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம்  இருக்குமா? – நவாஸ்கனி கேள்வி

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி.யான கே.நவாஸ்கனி உரையாற்றினார். அதில் அவர், ‘விற்றோம், விற்கிறோம், விற்போம்’ என்பதைத் தவிர வேறு சாதனை மத்திய அரசிடம் இருக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும் முஸ்லீம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கூறியதாவது: இந்த அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கம்போல வார்த்தை ஜாலங்களாலும், ஏமாற்றங்களாலும் நிறைந்தே காணப்பட்டதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். கார்ப்பரேட்டுகளின் … Read more

இந்தியா வரும் சர்வதேச ப.யணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

சர்வதேச அளவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தினந்தோறும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இவற்றில் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். … Read more

உ.பி.யில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவு.. 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்..! <!– உ.பி.யில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவு.. 60 … –>

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசச் சட்டமன்றத்திற்கு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக மேற்கு உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட்டபோதிலும், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக … Read more

ஜம்மு காஷ்மீரில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் இன்று மதியம் 12.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. குல்மார்க்கில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. பிப்ரவரி 5-ம் தேதி 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், கடந்த 5 நாளில் காஷ்மீரில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது … Read more