வரும் நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி.. ரூபாய்க்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் வித்தியாசம் இருக்காது – ஆர்பிஐ ஆளுநர் <!– வரும் நிதியாண்டில் டிஜிட்டல் கரன்சி.. ரூபாய்க்கும் டிஜிட்… –>

மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி வரும் நிதியாண்டில் வெளியிடப்படுமென என அறிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், புழக்கத்தில் உள்ள ரூபாய்க்கும் டிஜிட்டல் கரன்சிக்கும் வித்தியாசம் இருக்காது என தெரிவித்தார். மும்பையில் இது குறித்து பேசிய அவர், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உறுதியான கொள்கையை கொண்டுள்ளதாகவும், கிரிப்டோ கரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நிதி நிலையின் நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து எச்சரித்த சக்திகாந்த தாஸ், … Read more

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் – முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே, முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், … Read more

ஹிஜாப் ஆடை தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு: ஹிஜாப் ஆடை தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பாஜக, ஆர்எஸ்எஸ் கருத்துக்களை நாட்டின் கொள்கைகளாக மாற்ற முயல்வது ஆபத்து: ஹிஜாப் விவகாரத்தில் நவாஸ்கனி மக்களவையில் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பியான கே.நவாஸ்கனி உரையாற்றினார். அப்போது அவர், பாஜக, ஆர்எஸ்எஸ் கருத்துக்களை இந்த நாட்டின் கொள்கைகளாக மாற்ற முயல்வது ஆபத்தானது என ஆவேசமாகத் தெரிவித்தார். இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யும் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி கூறியதாவது: பாஜக ஆட்சியில் இருக்கும் கர்நாடக மாநிலத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமையின்படி, ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவியின் மீது … Read more

லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சர் மகனுக்கு ஜாமீன்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா , விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் … Read more

ஹிஜாப் விவகார வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு <!– ஹிஜாப் விவகார வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு –>

ஹிஜாப் விவகார வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை ஹிஜாப் விவகார வழக்கை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு எந்தவொரு மதம் சார்ந்த ஆடைகளையும் மாணவர்கள் அணிவதை, யாரும் வலியுறுத்த கூடாது – தலைமை நீதிபதி அமர்வு கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும் – கர்நாடக தலைமை நீதிபதி அமர்வு Source … Read more

வாடகை பாக்கி வைத்துள்ள சோனியா காந்தி, காங்கிரஸ் அலுவலகம் – ஆர்.டி.ஐ.யில் தகவல்

புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள சோனியா காந்தி வீட்டிற்கும் வாடகை செலுத்தவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் சுஜித் படேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் … Read more

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்பு: லாவ்அகர்வால் தகவல்

டெல்லி: தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 50,000-க்கும் அதிகமானோர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 11 மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000-50,000 ஆக உள்ளதாக லாவ்அகர்வால் கூறியுள்ளார். ஜன.24-ல் தினசரி கொரோனா பாதிப்பு 20.75%-ஆக இருந்த நிலையில் தற்போது 4.44%-ஆக குறைந்துள்ளது.

கேரளாவை போல் உ.பி மாறினால்? – யோகிக்கு 'பட்டியலிட்டு' பதிலடி கொடுத்த பினராயி

திருவனந்தபுரம்: யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தை கேரளத்துடன் ஒப்பிட்டு நேற்று பேசிய நிலையில், தற்போது ’கேரளாவை போல் உத்தரப் பிரதேசம் மாறினால் என்ன நடக்கும்?’ என சில வரிகளில் பினராயி விஜயன் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் … Read more

"உ.பி. கேரளாவாக மாறினால்".. நல்ல கல்வி, சுகாதாரம் கிடைக்கும்.. பினராயி விஜயன் கொட்டு!

உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீராக, கேரளாவாக, மேற்கு வங்கமாக மாறி விடும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. சசி தரூரைத் தொடர்ந்து தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும், யோகிக்கு பதில் கொடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று முதல் சட்டசபைத் தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இன்று 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் ஒரு வீடியோ உரையை வெளியிட்டிருந்தார். அதில் வாக்காளர்கள் … Read more