லக்கிம்பூர் கேரி வன்முறை விவகாரம்: ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத்: லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான வழக்கில் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை … Read more

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை; ஜிடிபி 7.8 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி 

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக தொடரும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. இதன்மூலம் தொடர்ச்சியாக 9வது முறையாக வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடருகின்றன. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்கூட்டம் … Read more

ஹிஜாப் பிரச்சினை: காவி சங்கிகளும் பச்சை சங்கிகளும்

“விடுதலை என்பது தலையை மூடியிருக்கும் துணியிலிருந்து அல்ல, மூளையைச் சுற்றியிருக்கும் குருட்டுச் சிலந்தி வலைகளிலிருந்து வெளியேறுவதுதான்” என்று ஒரு சகோதரி முகநூலில் எழுதியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ‘ஹிஜாப் ஆர்மி’ தற்கொலைப் படை ரேஞ்சுக்கு களமிறங்கி செயல்படும் என்பது எதிர்பார்த்ததுதான். இது ஹிஜாபிற்கு ஆதரவாக நிற்க வேண்டிய தருணமே, சந்தேகமில்லாமல்! ஏனெனில் இங்கே ஹிஜாபிற்கு எதிராக கிளர்ச்சி செய்வோர் இஸ்லாம் விரோத சக்திகள். அதேநேரம் ஹிஜாப் ஆர்மியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமும் இதுவே. இந்த சந்தர்ப்பத்தில்தான் பெண்களின் … Read more

இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம் <!– இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம் –>

வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஐந்நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் ஏற்றம் இல்லாமல் இருந்தது. ரெப்போ விகிதம், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் ஆகியன மாற்றமின்றித் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இதையடுத்துப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்தது. வங்கிகளின் பங்குமதிப்பு இரண்டரை விழுக்காடு வரை உயர்ந்தது. Source link

செம்மரம் வெட்ட அரசு பஸ்சில் திருமண கோஷ்டி போல் சென்ற கும்பல்- 32 பேர் தப்பி ஓட்டம்

திருப்பதி: திருப்பத்தூரிலிருந்து 32 பயணிகளுடன் திருப்பதிக்கு இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பதி அருகே சந்திரகிரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பஸ்சை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் கீழே குதித்து நாலாபுறமும் தப்பி ஓடினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர். ஆனால் அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. பஸ்சில் 32 … Read more

இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்ட சர்வதேச பயணிகளுக்கு இனி 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

உ.பி.யில் முதல்கட்டத் தேர்தல் தொடங்கியது: 58 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்.10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், … Read more

கொரோனாவை அழிக்க வரப்போகுது புதிய அஸ்திரம்!

2020 இல் இருந்து ஒட்டுமொத்த உலகையும் வாட்டி வதைத்துவரும் கொரோனா வைரஸ் அப்போது உருமாறி வருவதால். அதன் வீச்சு இதுவரை மூன்றாவது அலை வரை சென்றுள்ளது. ஒவ்வொரு அவையிலும் அதன் வீரியத்துக்கேற்ப லட்சக்கணக்கில் உயிர் பலி வாங்கி வரும் கொரோனாவின் கோரதாண்டவத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டு வருகின்றன. என்னதான் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் என தடுப்பூசி போட்டாலும் வைரஸ் உருமாறும்போது மனிதர்களை கொரோனா தாக்கிதான் … Read more

கேரளாவில் புதன்கிழமை தோறும் அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடை அணிய உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கைத்தறி பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மாநில அரசு ஏற்கனவே கூறிவந்தது. இந்த நிலையில் மாநில தொழில்துறை மந்திரி ராஜீவ், கேரள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கைத்தறி ஆடைகள் மூலமே சீருடை தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தற்போது பள்ளி சீருடைகள் அனைத்தும் கைத்தறி ஆடைகள் மூலமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்கள் இனி கைத்தறி ஆடை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும் என மாநில தொழிற்துறை … Read more

முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைப்பு

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து எய்ம்ஸ்  மருத்துவக் குழுவை அமைத்தது. எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமகையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி 2016-ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 5-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்த … Read more