விவசாய கடன்கள் தள்ளுபடி கொரோனாவில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம்: உபி.யில் காங். வாக்குறுதி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சட்டீஸ்கரை போன்று விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,’ என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இன்று தொடங்கி 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு முடித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. லக்னோவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ‘உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் … Read more