ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்… நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு <!– ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்… நேர்மையாக போலீ… –>

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தம்பதியர் ஆட்டோவில் தவறவிட்டுச்சென்ற நகைப்பையை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.  நேற்று ஹஷாம் நகரில் இருந்து டோலிசௌக் பகுதிக்கு ஆட்டோவில் திரும்பிய மிர்சா சுல்தான் பெய்க் – சமீரா பேகம் தம்பதியினர் சுமார் 5 லட்சம் மதிப்புடைய நகைகள் அடங்கிய பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக அவர்கள் லங்கார் ஹவுஸ் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்களது நகைப்பையை மீட்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். … Read more

ஐதராபாத்தில் 216 அடி உயரத்தில் நிறுவப்பட்ட ராமானுஜர் சிலையை தினமும் லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையம் அருகே 216 அடி உயரத்தில் ராமானுஜர் சிலை நிறுவப்பட்டது. இதனை கடந்த சனிக்கிழமை பிரமதர் மோடி திறந்து வைத்தார். ராமானுஜர் சிலை வெள்ளி செம்பு தங்கம் துத்தநாகம் டைட்டானியம் உள்ளிட்டவை கொண்டு பஞ்ச உலோகத்தில் ரூ.135 கோடி செலவில் 216 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை இந்தியாவில் 2-வது உயரமான சிலை ஆகும். ராமானுஜர் சிலை அமைக்கப்பட்ட இடம் 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சிலையை சுற்றிலும் … Read more

'ஜெய் ஸ்ரீராம்' என்றோ, 'அல்லாஹ் அக்பர்' என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் பேச்சு

பெங்களூரு: ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ‘அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பர்தா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துவந்த மாணவி முஸ்கானை, காவி துண்டுகள் அணிந்த‌ ஏபிவிபி … Read more

ஹிஜாப் வழக்கு: கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: ஹிஜாப் அணிவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் தொடரபாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, “எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வையுங்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நான் சத்திய … Read more

காதலர் தினத்தில் தரமான சம்பவம்… திருநங்கைகள் முடிவு!

கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகளான சியாமா எஸ் பிரபா, மனு கார்த்திகா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் அதுவும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்ய கொள்ள முடிவு எடுத்துள்ள திருநங்கைகள் ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான தகவலை உற்றார், உறவினர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்க அகம் மகிழ்ந்த அவர்கள், இருவரையும் ஆசீர்வாதித்து … Read more

கொரோனா சோதனையைக் கைவிடும் எய்ம்ஸ் மருத்துவமனை <!– கொரோனா சோதனையைக் கைவிடும் எய்ம்ஸ் மருத்துவமனை –>

கொரோனா சூழலில் உள்நோயாளியாகச் சேர்க்கவும், அறுவைச் சிகிச்சைக்கும் முன் நோயாளிகளுக்குச் சோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. இப்போது கொரோனா சோதனையைக் கைவிடுவதாக அறிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அறுவைச் சிகிச்சைக்கும், வழக்கமான பராமரிப்புக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அறிகுறியற்ற நோயாளிகள், வெளிநோயாளிகள், அவசர நோயாளிகள் ஆகியோருக்கு இது பொருந்தும் என அறிவித்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட தேசிய வழிகாட்டுதலின்படி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   Source link

கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் இறப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதிலளித்தார்.  அதன் விவரம் வருமாறு: 2018  முதல் 2020-ம் ஆண்டுக்கு இடையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையில்லா திண்டாட்டம், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். புள்ளிவிவரங்களின்படி, 9,140 பேர் வேலையின்மை காரணமாகவும், 16 ஆயிரத்து 91 பேர் கடன் தொல்லை காரணமாகவும் இறந்துள்ளனர். … Read more

ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: ஏப்ரல் 26ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

ஒரு பள்ளி தலைமை ஆசிரியர் பண்ற வேலையா இது ?

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட மேலாரணி மதுரா, தாங்கல் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 55 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக காளியப்பன் (வயது 55) மற்றும் ஒரு ஆசிரியை பணியாற்றி வருகின்றனர் . இந்நிலையில் பள்ளித் தலைமையாசிரியர் காளியப்பன் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறி சாலையில் திடீரென 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . சம்பவ … Read more

‘‘சமத்துவத்தின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது – இதுதான் ஆத்ம நிர்பார்’’ – ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: சமத்துவச் சிலை சீனாவில் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் ஆத்ம நிர்பார் கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை … Read more