கேரள இளைஞரின் தள்ளுவண்டி டீக்கடை; வெளிநாடுகளிலும் கிளை திறக்க திட்டம்

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பைசல் யூசுப் ஆரம்பித்த தள்ளுவண்டி டீக்கடையான ‘தி சாய் வாலா’, விரைவில் வெளிநாட்டிலும் கிளையை திறக்க உள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்காத பைசல், வேலைக்காக அலைந்துள்ளார். ஒரு வழியாக மும்பையில் ஒரு வேலை கிடைத்தது. அதை பற்றிக்கொண்டு அங்கிருந்து துபாய்க்குச் சென்றார். நாட்கள் ஓடின. நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்தில் காஃபி இறக்குமதி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஏழு ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். ஆனாலும், தேயிலைமீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. விதவிதமான தேயிலைகளை, … Read more

முதல்வரின் முன்னாள் செயலருக்கு அனைத்தும் தெரியும்: ஸ்வப்னா சுரேஷ் அதிரடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தூதரக முகவரிக்கு செல்வதாக இருந்த ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகாரில் கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் நாயர், … Read more

ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா?- ராஜ்நாத் சிங் கேள்வி

மதுரா: உத்தரபிரதேச மாநிலம், மதுராவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரிடம் சீன, பாகிஸ்தான் உறவு பற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜ்நாத் சிங் பதில் அளிக்கையில் கூறியதாவது:- முன்னாள் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆட்சியின்போது 2 பெரிய ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. ராகுல் காந்திக்கு வரலாறு தெரியாதா? சீனாவுக்கு பாகிஸ்தான் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை விட்டுக்கொடுத்தபோது நேருதான் … Read more

கொரோனா விதிகளை கடைபிடித்து நேரடி விசாரணை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3ம் அலை அதிகரிக்க தொடங்கியபோது, தலைநகர் டெல்லியிலும் தினசரி பாதிப்புகள் அதிகளவில் பதிவானது. இதனால், கடந்த ஜனவரி 3ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் … Read more

தனியார் மருத்துவ கல்லூரி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50% எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு அரசு கட்டணம்: தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதலில் தகவல்

தனியார் மருத்துவக் கல்லூரிமற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், 50 சதவீத எம்பிபிஎஸ்மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. கடந்த 3-ம் தேதி என்எம்சி வெளியிட்ட வழிகாட்டுதலில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது அமலுக்கு வந்தால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களான டிஒய்பாட்டீல் அல்லது பாரதி வித்யாபீடத்தில் மருத்துவம் பயிலும் 50% மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் செலுத்தினால் போதுமானது. தற்போது நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணம் … Read more

திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து வங்காளதேச டாக்கா பணம் கடத்த முயற்சி <!– திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து வங்காளதேச டாக்கா பணம… –>

திரிபுராவில் சைக்கிள் டயரில் மறைத்து கடத்த முயன்ற 10 லட்சம் வங்காளதேச டாக்கா பணத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். வங்காளதேச எல்லையான கோகுல்நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், புது வகையான கடத்தலை கண்டறிந்துள்ளனர். பணக் கடத்தல் குறித்து முன்கூட்டியே ரகசியத் தகவல் கிடைத்ததாகவும், சோதனை செய்ததில் 9 லட்சத்து 97 ஆயிரம் வங்காளதேச டாக்கா பணம் சிக்கியதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.   Source link

சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு குறைவாக வழங்கப்படும் – காங்கிரஸ் வாக்குறுதி

ஹரித்துவார்: உத்தர காண்ட் சட்டப்சபைத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வாக்காளர்களுக்கு நான்கு வாக்குறுதிகளை வழங்கினார்.  உத்தர காண்ட் மாநிலத்தில் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை ரூ. 500க்கு குறைவாக நிர்ணயம் செய்தல், 5 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 40,000 ரூபாய் மற்றும் வீட்டு வாசலில் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.  ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி … Read more

ஐக்கிய அரபு எமிரேட்சில் தலைமறைவு வாழ்க்கை; 29 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினான்; மும்பை குண்டுவெடிப்பு தீவிரவாதி: இந்திய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதியை ஐக்கிய அரசு அமீரகத்தில் இந்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. இவனை விரைவில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகரில் கடந்த 1993ம் ஆண்டு ஒரே நேரத்தில் 12 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 1400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன. இந்த … Read more

‘‘இந்தியா ஒரு ராஜாவால் வழிநடத்தப்படுகிறது’’- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் சாடல்

புதுடெல்லி: இன்றைய இந்தியா ஒரு ராஜாவால் வழிநடத்தப்படுகிறது, அவர் யாருடைய பேச்சையும் கேட்க தயாரில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தீவிர … Read more

பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 36 நாட்களில் 13 என்கவுண்டர்கள்- 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை <!– பாதுகாப்பு படையினரின் அதிரடி வேட்டையில் 36 நாட்களில் 13 எ… –>

ஜம்மு காஷ்மீரில் கடந்த 36 நாட்களாக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாலை ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் அங்கு பதுங்கியைருந்த 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். அவர்களுள் இக்லாக் அகமது (Ikhlaaq Ahmad) என்பவன் கடந்த மாத இறுதியில் போலிஸ் ஹெட் கான்ஸ்டாபிள் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தான். 36 நாட்களில் 13 என்கவுண்டர்களில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 24 … Read more