ராகுல் காந்தியின் பேச்சில் கவனிக்க மறந்த விஷயங்கள்

குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதங்களில் பலர் பேசினார்கள். அவற்றில் பிப்ரவரி 2 அன்று ராகுல் காந்தி பேசியவை முக்கியமானவை. ஆனால் ஊடகங்கள் அக்கருத்துக்களை மலிவுபடுத்தி ஏதோ தெருச்சண்டை போடுவது போலச் செய்தி வெளியிடுகின்றன. சில தேசிய ஊடகங்கள் அவரது முழுமையான பேச்சை வீடியோவாகப் போட்டு பின்னர் ஆளும் கட்சி அழுத்தம் காரணமாக நீக்கிவிட்டன. பாஜக தரப்பு தலைவர்களும் ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு தீவிரமான பதிலையோ விவாதங்களையோ முன்னெடுக்கவில்லை. மாறாக இணைய பாஜகவாசிகள் பப்பு … Read more

ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கிய முகேஷ் அம்பானி <!– ரூ.13.14 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்… –>

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 13 கோடியே 14 இலட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை அண்மையில் வாங்கியுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரில் தெற்கு மும்பையில் உள்ள மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்தக் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் அந்தக் கார் இரண்டரை டன் எடையும் 564 பிஎச்பி திறனும் கொண்டது. கரடுமுரடான பாதையிலும் செல்வதற்கு ஏற்றது. 2018இல் அறிமுகமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் அடிப்படை விலை 6 … Read more

திருப்பதியில் 15-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்க ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ந் தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஜவகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த மாதம், பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 15-ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இலவச … Read more

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பணியாற்றிய 241 இந்திய தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ம.பி.யைச் சேர்ந்த விஜய் பாஹீல் எம்.பி.யின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். சவுதி அரேபியா, கத்தார், யு.ஏ.இ., குவைத், சூடான், மலேசியா, சிங்கப்பூரிலும் இந்திய தொழிலாளர்கள் விபத்துகளில் பலியாகியுள்ளனர். இதேபோல், பஹ்ரைன், ஓமன், அஜர்பைஜான், போர்ச்சுகல், ஈராக், மொரிஷியஸ், ருமேனியா நாடுகளிலும் இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக கத்தார் … Read more

கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு – விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் இழப்பீடு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது: கரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு … Read more

வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ <!– வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடிச் சென்ற அமைச்சர்… சமூக வல… –>

உத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி வேட்பு மனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியரக வாயிலில் இருந்து தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைவரை ஓடியே சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் உபேந்திர திவாரி பெப்னா சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆவார். ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுத் தொடங்கியது. வேட்பு மனு முடிவடையச் சில நிமிடங்களுக்கு முன் பல்லியா ஆட்சியரக வாயிலுக்குக் காரில் … Read more

காரில் தனியாக பயணம் செய்பவர்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் இல்லை

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. காரை தனியாக ஓட்டி செல்பவர்கள் முக கவசம் அணியாமல் சென்றால் அவர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்து அபராதம் விதித்து வந்தன இதற்கு டெல்லி வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டெல்லி ஜகோர்ட்டும் பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு … Read more

புதுச்சேரி ஜிப்மரில் பிப்.7ம் தேதி முதல் வெளிநோயாளிகள் பிரிவு மீண்டும் செயல்படும் என அறிவிப்பு..!!

புதுச்சேரி: பிப்ரவரி 7ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை பிரிவுகளும் செயல்படும் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் குறைவதால் வழக்கம் போல் சிகிச்சை பிரிவுகள் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

டெல்லி, காஷ்மீரில் கடும் நில அதிர்வு

டெல்லி: காஷ்மீர், டெல்லி பகுதிகளில் இன்று கடும் நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக காஷ்மீர், டெல்லி பகுதிகளில் கடும் நில … Read more

அரசு ஊழியர்களுக்கு ஷாக் – மாநில அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 14 நாட்கள் சிறப்பு விடுமுறையை 7 நாட்களாக குறைத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இதனால் அவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வசதியாக இருந்தது. இந்நிலையில், … Read more