சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பவில்லை – அமைச்சர் நிதின் கட்காரி <!– சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிர… –>

சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதலீட்டை வெளிநாட்டிலிருந்து பெற விரும்பவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர்,  உள்நாட்டில் சிறிய முதலீட்டாளர்கள் ஒரு  லட்சம் ரூபாயினை ஆண்டுக்கு 8 சதவீத வட்டியில் வழங்க தயாராக உள்ளனர் என்றார். எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தவிர்த்து நமது சிறிய முதலீட்டாளர்களிடமிருந்தே உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு தேவையான நிதி திரட்டிக் கொள்ளப்படும் என்று கூறினார். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க தாம் விரும்பவில்லை என்று கூறிய கட்கரி, அதற்கு மாறாக, … Read more

யோகி ஆதித்யநாத் அரசு ஏழைகளின் கோரிக்கையை கேட்பதில்லை : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு ஏழை, நடுத்தர மக்களின் பேச்சைக் கேட்பதில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நொய்டாவின் டூப் பகுதியில் வசிப்பவர்களுக்கு பெரும் அநீதி … Read more

பிரசார கூட்டங்கள் கட்டுப்பாடு தளர்வு

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேர்தல் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘பொதுவெளி பிரசார பொதுக் கூட்டங்களில் 30 சதவீதம் பேரும், உள்ளரங்க பிரசாரத்தில் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50 சதவீதம் பேரும் பங்கேற்கலாம். … Read more

5 கோடி கோர்ப்வேக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர்: வரிவிதிப்புக்கு முந்தைய விலை ரூ.145 ஆக இருக்கும்

ஹைதராபாதைச் சேர்ந்த பயலாஜிகல் இ நிறுவனத்தின் கோர்ப்வேக்ஸ் என்ற கரோனா தடுப்பூசியை வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. ஒரு டோஸ் ரூ.145 விலையில் (வரியின்றி) 5 கோடி டோஸ் வாங்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால் இந்த தடுப்பூசியை எந்த வயது பிரிவினருக்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் இது தொடர்பான ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சகத்தில் தடுப்பூசி தொடர் பான தொழில்நுட்பக் குழு ஈடுபட்டு வருகிறது. இப்போது … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் <!– பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங… –>

பாரத ரத்னா விருது பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இன்று காலமானார். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1929ஆம் ஆண்டு இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர், திரையுலகில் மராத்தி, இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 இந்திய மொழிகளில் முப்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிய அவர் இந்தியாவின் இசைக்குயில் என்றழைக்கப்படுகிறார். திரைத்துறை சாதனைக்காக அவருக்கு 1989ஆம் ஆண்டு இந்திய அரசால் தாதா … Read more

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் இன்று பதில் அளிக்கிறார்

புதுடெல்லி: கடந்த மாதம் 31ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்க நாளான்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் … Read more

அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் பொம்மை இன்று டெல்லி பயணம்: மேலிட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவர் பதவியேற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் முழு அளவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இதனால் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த முறை அமைச்சர் பதவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று மூத்த பாஜ எம்எல்ஏக்கள் முயன்று வருகின்றனர். இதற்காக தங்களுக்கு நெருங்கிய பழக்கமுள்ள தலைவர்களை சந்தித்து லாபியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாரிய, … Read more

இந்தியாவில் கரோனா பாசிடிவிட்டி விகிதம் 7.4% ஆக சரிவு; புதிதாக 1,07,474 பேருக்கு தொற்று: அறிக 10 தகவல்கள்

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதம் (அதாவது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உள்ளது என்ற விகிதம்) 7.4% ஆக சரிந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 474 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 16% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 1. கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த … Read more

உத்திரப்பிரதேச ஷிவாலிக் வனப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி உயிரிழந்த யானை <!– உத்திரப்பிரதேச ஷிவாலிக் வனப்பகுதியில் அறுந்து கிடந்த மின்… –>

உத்திரப்பிரதேச மாநிலம் சகாரன்பூரில் உள்ள ஷிவாலிக் வனப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அந்த மின்கம்பியில் 11 கிலோ வோல்ட் என்ற அளவில் உயரழுத்த மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது., மின்கம்பி தாழ்வாக தொங்கிக்கொண்டிருந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

பாகிஸ்தானை சேர்ந்த போதை பொருள் கடத்தல்காரர்கள் மூன்று பேர் சுட்டுக் கொலை

சம்பா: ஐம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் எல்லையை தாண்டி போதைப் பொருட்களை கடத்த முயன்ற மூன்று பாகிஸ்தானிய கடத்தல்காரர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் இருந்து பயணித்து, சர்வதேச எல்லையைத் தாண்டி, பிளாஸ்டிக் பைப் மூலம், எல்லை வேலி வழியாக போதைப் பொருளைக் கடத்த முயன்றதாக எல்லைப் பாதுகாப்பு படையின் ஜம்மு எல்லைப்புற இன்ஸ்பெக்டர் ஜெனரல்  டி.கே.பூரா தெரிவித்துள்ளார்.   கடந்த 10 நாட்களாக போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் குறித்து எங்களுக்கு தகவல் வந்ததாகவும், அதன் … Read more