விதிகளை மீறிக் கட்டப்பட்ட 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம்.. 2 வாரங்களுக்குள் இடித்து நொறுக்க மீண்டும் அறிவுறுத்தல் <!– விதிகளை மீறிக் கட்டப்பட்ட 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம… –>

டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட நாற்பது மாடிகள் கொண்ட இரட்டைக் கோபுரக் கட்டடங்களை இரண்டு வாரங்களுக்குள் இடித்து நொறுக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. சூப்பர்டெக் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் விதிகளை மீறிக் கட்டிய கட்டடத்தை இடித்து நொறுக்கக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வீடுகளை வாங்க ஏற்கெனவே பணம் செலுத்தியோருக்கு ஆண்டுக்கு 12 விழுக்காடு வட்டியுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றாதது குறித்த … Read more

பிரதமரின் மோடியின் கருத்து அப்பட்டமான பொய் – அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி:  நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி,கொரோனா முதல் அலையின் போது புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி தூண்டி விட்டதாகவும், மேலும் அந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக ரெயில் டிக்கெட்டுகளை வழங்கியது என்றும் தெரிவித்திருந்தார்.  அதேபோல் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லியை விட்டு செல்லலாம், அதற்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என டெல்லி அரசு கூறியதாகவும் பிரதமர் … Read more

அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து உச்ச … Read more

திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்க தயக்கம் ஏன்? – ஒரு விரைவுப் பார்வை

“திருமண பாலியல் வல்லுறுவு (மேரிட்டல் ரேப்) பிரச்சினையில், மனைவியின் சம்மதம் என்பது இச்சமூகத்தில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கருத்தாக உள்ளது. பெண்ணின் சம்மதத்திற்கு முக்கியத்துவம் அளித்து முன்னிலைப்படுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – இது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கருத்து. இவர் மட்டுமல்ல பல்வேறு கட்சியினரும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் மத்திய அரசு, திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் … Read more

அட எங்க கொள்கை வேறங்க.. பதறியடித்து முஸ்லீம் வேட்பாளரை அறிவித்த பாஜக கூட்டாளி!

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ள அப்னா தளம் (எஸ்) கட்சி, தனக்கும், பாஜகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் இருப்பதாக அறிவித்துள்ளது. அத்தோடு உ.பி. சட்டசபைத் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளரையும் அது அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீது அதிருப்தி அதிகரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. இதனால் அமித் ஷா கவலை அடைந்துள்ளதாகவும், உ.பி. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வேகத்தில் அவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மற்ற வேலைகளைக் கூட பாஜக தலைமை … Read more

அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி <!– அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட… –>

கல்வித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்பட அனைத்து அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உதவி வருவதாகத் தெரிவித்தார். Source link

மேகதாது அணை விவகாரம் – கர்நாடகாவிற்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு மேகதாது அணைத் திட்டத்திற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கர்நாடக மாநில எம்.பி  மேகாதாது அணைக்கு அனுமதி எப்போது என வழங்கப்படும் என்று  என எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பினார்.  இக்கேள்விக்கு பதிலளித்துள்ள … Read more

சபரிமலையில் மாசி மாத பூஜை 15,000 பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் (13ம் தேதி) முதல் 17ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகம் மற்றும் படிபூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் இந்த 5 நாட்களிலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு … Read more

தமிழகத்தில் 1967-க்கு பின் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை – ராகுல் பேச்சுக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி ‘1967-க்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை’ என்று தெரிவித்ததுடன், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். கடந்த மாதம் 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையோடு அவை … Read more

திமுகவின் சமூகநீதி கூட்டமைப்பு: முதல் ஆளாய் இணைந்த காங்கிரஸ்!

‘பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும்’ என்று கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்திருந்தார். தனது இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக கூட்டமைப்பில் இணைய வருமாறு காங்கிரஸ், அதிமுக, ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் தனித்தனியாக கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், அந்த கடிதத்தை … Read more