யார் இந்த ரேகா குப்தா? – மாணவர் சங்கத் தலைவர் முதல் டெல்லியின் 4-வது பெண் முதல்வர் வரை!

புதுடெல்லி: டெல்லியின் 9-வது முதல்வர், டெல்லியின் 4-வது பெண் முதல்வர் முதலான பெருமைகளை வசப்படுத்தும் 50 வயது ரேகா குப்தாவின் குடும்ப, அரசியல் பின்னணி தொடர்பான தேடல்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், அவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகள் இங்கே… ரேகா குப்தா 1974-ஆம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி ஹரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள நந்தகர் எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை வங்கி அதிகாரியாக இருந்தவராவார். 1976-ல் ரேகா குப்தாவின் குடும்பத்தினர் … Read more

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் பொறுப்பேற்பு

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு முன் நான்கு வருடங்கள் அப்பொறுப்பில் இருந்த ராஜீவ் குமார் 24-க்கும் மேற்பட்ட தேர்தல்களை நடத்தியுள்ளார். இதில், குடியரசுத் தலைவர் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் அடங்கும். அவரது பதவிக் காலம் பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையாராக ஞானேஷ் குமாரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். … Read more

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்பு: ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

புதுடெல்லி: டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், நேற்று டெல்லி முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி வீட்டில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் … Read more

Delhi New CM: யார் இந்த ரேகா குப்தா? டெல்லி புதிய முதலமைச்சரின் சுவாரஸ்ய பின்னணி!

இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள விழாவில் டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்கிறார் ரேகா குப்தா. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

காலணி தொழிலாளியின் குடும்பத்தாரை சந்தித்தார் ராகுல்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வழக்கு விசாரணை ஒன்றுக்காக கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தர பிரதேசம் சுல்தான்பூர் செல்லும் வழியில் காலணி தைக்கும் தொழிலாளி ராம்சேத் என்பவரை சந்தித்து அவரது தொழில் குறித்து விசாரித்தார். அவரது விருப்பப்படி ராம்சேத், அவரது மகன், பேரன், மகள், மருமகன் ஆகியோரை ராகுல் டெல்லி வீட்டுக்கு வரவழைத்தார். சோனியா, பிரியங்கா காந்தியும் அவர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து ராம்சேத் கூறியதாவது: எனது தொழிலை விரிவுபடுத்த ராகுல் உதவியுள்ளார். … Read more

உ.பி.யின் 75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு

உ.பி.யின் 75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள 7 மத்திய சிறைகள் உட்பட மொத்தம் 75 சிறைகளில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். மகா கும்பமேளாவை முன்னிட்டு, சிறைக் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில நீர் மேலாண்மை துறை செய்துள்ளது. இதுகுறித்து மாநில சிறைத் துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரயாக்ராஜ் திரிவேணி … Read more

உலகின் மிகப்பெரிய உந்துசக்தி கலவை இயந்திரம்: இஸ்ரோ உருவாக்கி சாதனை

விண்வெளித்துறையி்ல தற்சார்பு நிலையை அடையும் வகையில், 10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளித்துறையில் இஸ்ரோ தற்சார்பு நிலையை அடைந்து வருகிறது. தற்போது கிரையோஜெனிக் இன்ஜின் உள்நாட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் 10 டன் எடையில் உலகின்மிகப் பெரிய உந்துசக்தி கலவை இயந்திரத்தை இஸ்ரோ வெற்றிகரமாக உருவாக்கியுள்து. இதன் எடை 10 டன். இந்த புதிய சாதனம் பெங்களூருவில் உள்ள மத்திய தயாரிப்பு தொழில்நட்ப … Read more

“மக்களின் நம்பிக்கை மீதான தாக்குதல் இது!” – மம்தாவின் ‘மரண கும்பமேளா’ கருத்துக்கு சிவராஜ் சவுகான் எதிர்வினை

புதுடெல்லி: மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என விமர்சித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “மக்களின் நம்பிக்கை மீது தாக்குதல் தொடுப்பதும் குற்றமே” என்று சாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்களைக் குறிப்பிட்டு மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என்று விமர்சித்திருந்தார். மேலும், கும்பமேளா கூட்ட … Read more

டெல்லி துணை நிலை ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரேகா குப்தா!

புதுடெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்த ரேகா குப்தா ஆட்சியமைக்க உரிமை கோரினார். டெல்லியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். வியாழக்கிழமை (பிப்.20) முதல்வராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் 48 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் டெல்லியின் புதிய … Read more

டெல்லியின் அடுத்த முதல்வர் – யார் இந்த ரேகா குப்தா?

புதுடெல்லி: இன்று மாலை டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் நாளை (பிப்.20) பதவியேற்கிறார். டெல்லியின் பாஜக முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (பிப்.19) இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் பாஜகவின் 48 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் … Read more