U19 டி20 உலகக் கோப்பை: மீண்டும் சாம்பியனான இந்திய மகளிர் அணி!

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சிறப்பாக விளையாடி அரை இறுதிப் போட்டிக்கு இந்திய, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முன்னேறியது.  இதில் வெற்றிப் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இந்த நிலையில், இவர்களுக்கான இறுதிப் போட்டி இன்று மலேசியா கோலாலம்பூர் மைதானத்தில் நடந்தது.  சொதப்பிய தென்னாப்பிரிக்கா அணி  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தன் போட்டி.. மனம் திறந்த ரோகித் சர்மா!

மினி உலகக் கோப்பை என கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இம்முறை இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 1996ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் தற்போது தான் ஐசிசி தொடர் நடைபெறுகிறது.  அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது என்று தெரிந்த உடனேயே இந்தியா அங்கு சென்று விளையாடாது என பிசிசிஐ தெரிவித்தது.  இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் … Read more

இந்த 2 டீம்தான் பைனலுக்கு வரும்.. அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்!

Champions Trophy 2025: உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கும் இத்தொடர் மார்ச் 09ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.  இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் குரூப் பி-யிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் ஏ-விலும் உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி அதில் முன்னிலை பெறும் 4 அணிகள் அரை இறுதி போட்டிக்கு … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; முகமதின் அணியை பந்தாடிய மோகன் பகான்

புதுடெல்லி , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் முகமதின் – மோகன் பகான் அணிகள் ஆடின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மோகன் பகான் அணி 3 கோல்களை அடித்து அசத்தியது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் மோகன் பகான் அணி ஒரு கோல் … Read more

எஸ்.ஏ.20 ஓவர் லீக்: பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப்

க்பெஹர்கா, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை க்பெஹர்காவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது. … Read more

பி.சி.சி.ஐ.விருது 2024: ஷசாங்க் சிங், தனுஷ் கோட்டியானுக்கு லாலா அமர்நாத் விருது

மும்பை, இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான லாலா அமர்நாத் விருது ஷசாங்க் சிங் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. உள்ளூர் தொடர்கள் மற்றும் ரஞ்சி கோப்பையில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டருக்கு லாலா அமர்நாத் விருது வழங்கப்படுகிறது. அதன்படி உள்நாட்டு தொடர்களில் விளையாடிய சிறந்த ஆல் ரவுண்டருக்கான ‘லாலா அமர்நாத் விருது’ ஷசாங்க் சிங்கிற்கும், ரஞ்சி கோப்பையின் சிற்ந்த ஆல் … Read more

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற விருத்திமான் சஹா

மும்பை, இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சஹா (வயது 40) அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கடந்த நவம்பர் மாதம் ஓய்வை அறிவித்தார். இவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப்பின் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அணியில் நிலையான இடம்பிடித்தார். இருப்பினும் கேஎல் ராகுலின் வருகை மற்றும் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இவர் கடைசியாக … Read more

விராட் கோலிக்கு ரஞ்சி கோப்பை எல்லாம் தேவையில்லை – ராயுடு ஆதரவு

மும்பை, இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இதில் குறிப்பாக விராட் கோலி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்து வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து … Read more

ஐபிஎல் 2025: கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்! விளையாடப் போகும் வெளிநாட்டு வீரர்கள் யார் யார்?

IPL 2025, Chennai Super Kings Foreign Players: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வொயிட் பால் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்.19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.  சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் மார்ச் 21ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும். அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்களும் உற்சாகத்துடன் இருக்கின்றனர். ஐபிஎல் 2025: அடங்க மறுக்கும் … Read more

"விராட் கோலி ரஞ்சி விளையாட தேவையில்லை" – முன்னாள் வீரர்!

இந்திய அணி சமீபமாக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் கடுமையாக சொதப்பியது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் படுதோல்வி அடைந்தது என டெஸ்ட் தொடர்களில் மிக மோசமான விளையாடியது.  இதற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமசகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மூத்த வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் … Read more