இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டி20: 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா..!

பர்மிங்காம், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 49 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 20 … Read more

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

காலே ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறக்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 5 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் . அடுத்து வந்த லபுசேன், ஸ்மித் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் .லபுசேன் சிறப்பாக ஆடி சதமடித்து 104 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த … Read more

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 : இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

சவுத்தம்டன், இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டதுஅதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது .அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணி : ரோகித் … Read more

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிரனாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

கோலாலம்பூர், மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரர் கன்டா சுமேயமாவுடன் மோதினார். இந்த காலிறுதி ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய் 25-23, 22-20 என்ற நேர்செட்டில் கன்டா சுமேயமாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். தினத்தந்தி Related Tags : Malaysia Masters மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் கவுண்ட்டவுன் தொடங்கியது..!

மெல்போர்ன், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 100 நாள் கவுண்ட்டவுனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று தொடங்கியது. 4 கண்டங்களை சேர்ந்த 13 நாடுகளில் 35 இடங்களுக்கு இந்த உலக கோப்பை எடுத்து செல்லப்படுகிறது. ஜெர்மனி, கானா, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் இதில் அடங்கும். … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி: ஸ்டேட் வங்கியை வீழ்த்தி ஏ.ஜி.அலுவலக அணி வெற்றி..!

சென்னை, சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஏ.ஜி.அலுவலக அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. ஏ.ஜி.அலுவலக அணியில் ரஞ்சித், சஞ்சய் தலா 2 கோலும், யுவராஜ் ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் சென்னை துறைமுக அணி 5-0 என்ற கோல் கணக்கில் இந்திரா காந்தி கிளப்பை வென்றது. துறைமுக அணியில் … Read more

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவையொட்டி தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆண்கள் பிரிவில் கேரளா காவல் துறை, சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஜி.எஸ்.டி., பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்கின்றன. பெண்கள் பிரிவில் கேரளா கே.எஸ்.இ.பி. அணி, கேரளா காவல் துறை, சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஐ.சி.எப். ஆகிய அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த போட்டியை சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை … Read more

விம்பிள்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2-6,6-3,6-2,6-4 ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் … Read more

சூப்பர் டிவிசன் ஆக்கி: ஐ.சி.எப் அணியிடம் எஸ்.டி.ஏ.டி. தோல்வி

சென்னை, சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜி.எஸ்.டி.மற்றும் மத்திய கலால் வரி அணியை தோற்கடித்தது. ஐ.ஓ.பி. அணியில் ஹர்மன்பிரீத் சிங், சுரேஷ் பாபு, நம்பி கணேஷ், வினோத் ராயர் ஆகியோர் கோல் அடித்தனர். மத்திய கலால் வரி அணியில் பிச்சைமணி, ஹசன் பாஷா … Read more

முதல் டி20 போட்டி: இங்கிலாந்து அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

சவுத்தம்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகி உள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் … Read more