பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-சீனா அணிகள் இன்று மோதல்

ஆம்ஸ்டெல்வீன், 15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. இந்த நிலையில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி தனது … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா கால்இறுதிக்கு தகுதி

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா 7-5, 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹலெப் (ருமேனியா) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப், ரிபகினா காலிறுதிக்கு தகுதி..!

லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார். இந்த போட்டியில் ஹாலெப் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் படோசாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரிபகினா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதினார். இந்த போட்டியில் மார்டிக்கை 7-5, 6-3 என்ற … Read more

வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து; 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்ப்பு

பர்மிங்கம், கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் எட்ஜ்பாஸ்டன் நகரில் உள்ள பர்மிங்கம் மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் … Read more

டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி…!

திண்டுக்கல், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி திண்டுக்கல் டிராகஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் அனிருதா மற்றும் சித்தார்த் களமிறங்கினர். சித்தார்த் ரன் எதுவும் எடுக்காமலும் (0), அனிருதா 8 ரன் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்துவந்த அரவிந்த் சற்று நிலைத்து … Read more

ரோஜர் பெடரர் வருகை… 'வாத்தி கம்மிங்' என்று பதிவிட்ட விம்பிள்டன்

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 1877 முதல் விம்பிள்டன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். அவர் நடப்பு தொடரில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அவர் சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் … Read more

பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் 'டிரா'

ஆம்ஸ்டெல்வீன், 15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி, நேற்று தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 9-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் இசபெல்லா பீட்டரும், 28-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவின் வந்தானா கட்டாரியாவும் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் இன்று மோதல்

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. மூன்று நாள் இடைவெளிக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: ஜெர்மனி வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் ஜூலே நீமையர் (ஜெர்மனி) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் வீராங்கனை ஹீதர் வாட்சனை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 22 வயதான நீமையர் தனது அறிமுக விம்பிள்டன் தொடரிலேயே கால்இறுதியை எட்டி கவனத்தை ஈர்த்துள்ளார். மற்றொரு ஜெர்மனி வீராங்கனை தாட்ஜனா மரியா 5-7, 7-5, … Read more

சாத்தூரில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி

விருதுநகர் சாத்தூர், சாத்தூரில் புனித தனிஸ்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, தேனி, நாகர்கோவில், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி அணியினர் முதல் பரிசையும், நாகர்கோவில் அணியினர் 2-வது பரிசையும், விருதுநகர் அணியினர் 3-வது பரிசையும் வென்றனர். போட்டிக்கான … Read more