டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெல்லை ராயல் கிங்ஸ்

திண்டுக்கல், 8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரு ஆட்டங்கள் நடக்கின்றன. முதலில் தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை சந்தித்தது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டியானது மழை காரணமாக ஆட்டநேரம் … Read more

ஐசிசி டி20 தரவரிசை : விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் அதிக நாள் டி20 தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 1014 நாட்கள் முதல் இடத்தில் தொடர்கிறார். மொத்தம் 1013 நாட்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் கேப்டன் முறியடித்துள்ளார். பாபர் அசாம் 818 புள்ளிகள் எடுத்து டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விலகல் ?

பர்மிங்காம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இன்னும் முழுமையாக … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

காலே, இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ,இலங்கை காலேவில் இன்று தொடங்கியது . டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதனால் அந்த அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் இழந்தது.இலங்கை அணியில் நிரோஷன் டிக்வெல்லா மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து .58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . இறுதியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளை … Read more

மலேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிஇன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து ,தாய்லாந்து நாட்டின் பிட்டயபோர்ன் சாய்வான் ஆகியோர் மோதினர், விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-13,21-17 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றோரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் , அமெரிக்க வீராங்கனை ஐரிஸ் வாங் உடனான மோதலில் உலகின் 11-21 17-21 என்ற கணக்கில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் -பிரான்ஸ் நாட்டின் ஹார்மோனி டான் ஆகியோர் மோதினர். ஒரு வருடத்திற்குப் பிறகு டென்னிஸ் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் களத்திற்கு திரும்பியதால் இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் … Read more

தீபக் ஹூடா அதிரடி சதம்: அயர்லாந்து அணிக்கு 228 ரன்கள் வெற்றி இலக்கு

டப்ளின், இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ரு வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்த … Read more

விம்பிள்டன் டென்னிஸ் : மேட்டியோ பெரெட்னி தொடரிலிருந்து விலகல்

லண்டன், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது .இந்த தொடர் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில் 2021ம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் 2ஆம் இடம் பிடித்த இத்தாலியை சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி இந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். தினத்தந்தி Related Tags : … Read more

அயர்லாந்துக்கு எதிரான 2-வது டி20; டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு

டப்ளின், இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பந்து வீசி வருகிறது. தினத்தந்தி Related Tags : அயர்லாந்து 20 ஓவர் கிரிக்கெட் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அறிவிப்பு

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மனும் இங்கிலாந்து அணிக்காக உலகோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அயர்லாந்து அணிக்காக அறிமுகமாகிய மோர்கன், பின்னர் இங்கிலாந்து அணிக்காக ஆடினார் .2019 உலக கோப்பையில் களமிறங்கிய இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம், இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலக கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன். சர்வதேச கிரிக்கெட்டில் மோர்கன் 126 போட்டிகள் … Read more