சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை இளம் வீரர் சேர்ப்பு

மும்பை,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காயம் குணமடையாததால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் ஒதுங்கினார்.  இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டு … Read more

தோனி அதிரடியால் சென்னை அணி திரில் வெற்றி : மும்பைக்கு 7-வது தோல்வி..!!

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற  போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி  2-வது பந்திலே ரோகித் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியீடு

சென்னை,  5-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி சேலம், நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை டி.என்.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர், அருண், அருண்குமார், ஹரிஷ்குமார், என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், கவுசிக் … Read more

‘விராட் கோலிக்கு ஓய்வு தேவை’ – முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கருத்து

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் சதம் அடிக்க முடியவில்லை. தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கோலி, நேற்று முன்தினம் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆனார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் 7 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும் 33 வயதான … Read more

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு 5 வெண்கலப் பதக்கங்கள்

உலான்பாடர் (மங்கோலியா), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி தஹியா, பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 இந்திய மல்யுத்த வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ப்ரீஸ்டைல் மற்றும் கிரேக்க-ரோமன் பிரிவுகளில் ஆண்கள் அணியிலிருந்து 20 மல்யுத்த வீரர்கள், மகளிர் அணியைச் சேர்ந்த 10 மல்யுத்த வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்திய மல்யுத்த வீரர்கள் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் 1.28 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் நேற்று நடந்த கிரிகோ … Read more

கேஎல் ராகுலுக்கு விரைவில் திருமணம் ? – வெளிவந்த தகவல்..!!

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக திகழ்பவர் கேஎல் ராகுல். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் லக்னோ அணியை வழிநடத்தி வருகிறார். இவரும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் பல நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதியா ஷெட்டி, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுனில் ஷெட்டியின் மகளாவார். கிரிக்கெட் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட இவர் நடப்பு தொடரில் ராகுல் விளையாடும் லக்னோ அணியின் போட்டிகளை ஒன்று விடாமல் மைதானத்திற்கு வந்து பார்த்து … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : 20 ஓவர் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து பிரித்வி ஷா புதிய சாதனை..!!

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த  பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் … Read more

ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு

சென்னை, ஸ்பெயினில் நடைபெற்ற 48-வது லா ரோடா சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில், சென்னையைச் சேர்ந்த குகேஷ் 8 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார்.  மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட போட்டியில் தோல்வியின்றி 7 வெற்றிகளையும், 2 டிராக்களையும் அவர் பெற்றார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா, 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் … Read more

“தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுகிறார்” – கவாஸ்கர் பாராட்டு

பெங்களூரு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், “ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கிறார்.  அவர் தனது அதிரடியான பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற தினேஷ் கார்த்திக் விரும்புகிறார். அவரது வயதை பார்க்காமல், அவர் … Read more

ஆசிய கோப்பை கால்பந்து; இறுதி தகுதி சுற்றுக்கான இந்திய உத்தேச அணி அறிவிப்பு

பெங்களூரு, ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி தகுதி சுற்றுக்கான இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் மொத்தம் 41 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடக்கிறது. இந்த பயிற்சி முகாம் வருகின்ற ஏப்ரல் 24-ந் தேதி தொடங்கி மே 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து 2-வது கட்ட பயிற்சி முகாம் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.