டி20 உலகக் கோப்பை 2022: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஐந்து நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!

மெல்போர்ன், ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது, இதில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெற உள்ளது. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்டு, ஜிலாங், ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய ஏழு இடங்களில் விளையாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகள் தற்போது நடைபெறவுள்ளது.  உலகக் கோப்பைக்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது, இரண்டு போட்டி நாட்களுக்கான  டிக்கெட் விற்பனைக்கு … Read more

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் நியமனம்!

லண்டன், இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் வீரர் பால் காலிங்வுட், அடுத்த மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரை தலைமைப் பயிற்சியாளராக நீடிப்பார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் படுமோசமாக இங்கிலாந்து இழந்ததையடுத்து அப்பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் … Read more

பீஜிங் ஒலிம்பிக்; பயோ-பபிள் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு பணிவிடை செய்யும் ரோபோக்கள்

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவாமல் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற சீன அரசு பீஜிங் நகருக்குள் இன்னொரு நகரத்தை கட்டமைத்து உள்ளது. பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாக ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அதனை சார்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள்.வெளி உலகிலிருந்து, அதாவது பீஜிங் நகரவாசிகளிடமிருந்து கொரோனா தொற்று ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த அமைப்பை … Read more

பீஜிங் ஒலிம்பிக்;மாஸ்க் அணிந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்க ஐஸ்-ஆக்கி விளையாடிய வீராங்கனைகள்!

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற பெண்கள் ஐஸ்-ஆக்கி போட்டியில் ரஷியா-கனடா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் கனடா வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டி தொடங்கும் முன் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவர சிறிது கால தாமதமானதால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த போட்டியில் விளையாடிய இருநாட்டு வீராங்கனைகளும் கொரோனா பரவாமல் இருக்க ‘கே என்.95’ ரக மாஸ்க் அணிந்து கொண்டு போட்டியில் … Read more

விரைவில் பெண்கள் ஐ.பி.எல்..! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்

புது டெல்லி, பெண்கள் ஐ.பி.எல்  கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்  முதன்முறையாக தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா  தெரிவித்தார். அதற்கான  முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும்,  இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறினார். அவர் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின் போது, 3 அணிகள் மட்டும் பங்கேற்கும் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இம்முறை  ஐ.பி.எல்  தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளன. கொரோனா தொற்று … Read more

ஜூனியர் உலகக்கோப்பையில் சவால்களை கடந்து வெற்றி: வி.வி.எஸ் லட்சுமண்

ஆண்டிகுவா, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரும், ஜூனியர் அணிக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியுமாக செயல்பட்ட முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கூறுகையில், ‘முதலில் ஜூனியர் அணியின் தேர்வு கமிட்டிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இது புதிய தேர்வு கமிட்டி. உறுப்பினர்களுக்கு சரியான வீரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்வது சவாலாக இருந்திருக்கும். அதன் பிறகு தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் மற்றும் உதவியாளர்கள் இந்த அணியை சீரிய முறையில் ஒருங்கிணைத்தனர். அதைத் தொடர்ந்து இந்திய இளம் வீரர்கள் … Read more

1000ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்றது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள … Read more

முதல் ஒருநாள் போட்டி : ஆலோசனை கூறிய கோலி! ரிவ்யூ எடுத்த ரோகித்..

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி கழற்றி விடப்பட்டார். இதையடுத்து, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஒரு வீரராக அணியில் தொடரும் விராட் கோலியின் செயல்பாடு எப்படி இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர ஆலோசனை நடத்தினர்.  இதற்கு பதில் கிடைக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்தது. அப்போது 22 ஓவரில் … Read more

மராட்டிய ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் மகுடம் சூடினர்

புனே, மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.  இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலிய நாட்டின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஸ்மித் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். இந்த இறுதி போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது.  இதில், 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். இதன்மூலம், போபண்ணா … Read more

இந்திய அணி தனது ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற 177 ரன்கள் இலக்கு!

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய வெஸ்ட் … Read more