உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியா முதலிடம்…!

கெய்ரோ, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி 17-7 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.  முன்னதாக நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா-ஜெர்மனி மோதின. அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: 3 வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 271/2

ராவல்பிண்டி, ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 476 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 73 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்து இருந்த … Read more

ஜடேஜா டிக்ளேர் முடிவை அறிவிக்க விரும்பியது பாராட்டுக்குரியது; கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

 மொகாலி, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 65 ஓவர்களில் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் – கோவா ஆட்டம் 'டிரா'

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அரைஇறுதிக்கு … Read more

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்..!!

கெய்ரோ, எகிப்து நாட்டின் கெய்ரோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் உலகக் கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணிகளான ராஹி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் தங்கம் வென்றனர். விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரை 17-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது. இது உலகக் கோப்பையில் ஈஷா பெற்ற இரண்டாவது … Read more

இலங்கை அணியுடனான அபார வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணியின் நிலை என்ன?

துபாய்,  இன்று நடைபெற்ற இந்தியா – இலங்கை  அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகான  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது. அதன்படி 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில்  உள்ளது. 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப்-1 சுற்றில் நீடிக்கிறது இந்தியா..!

புதுடெல்லி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்-1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா-டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டம் டெல்லியில் நடந்தது. இதில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றனர்.  இந்த நிலையில் நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி 6-7 (3-7), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் பிரடெரிக் நீல்சன், மைக்கேல் டார்பேகார்ட் இணையை வீழ்த்தியது.  அடுத்து … Read more

லியோன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் உக்ரைனின் யாஸ்ட்ரெம்ஸ்கா..!

பிரான்ஸ், உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 24-ந்தேதி அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் உக்கிரமான போர் நேற்று 10-வது நாளை எட்டியது.  இந்நிலையில் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடெசாவில் நடந்த தாக்குதலின் போது உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனையான தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா மற்றும் அவரது குடும்பத்தினரும் ரஷிய வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்ப நிலத்தடி கார் பார்க்கிங்கில் இரண்டு இரவுகள் தங்கியிருந்தனர். அதன் பின் அவரது … Read more

ரஞ்சி கோப்பை: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்கண்ட் அணிக்கு 212 ரன்கள் இலக்கு..!

கவுகாத்தி,  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்றில் தமிழ்நாடு-ஜார்கண்ட் (எச் பிரிவு) அணிகள் மோதும் ஆட்டம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 285 ரன்னும், ஜார்கண்ட் 226 ரன்னும் எடுத்தன.  59 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி 2-வது இன்னிங்சில் 54.2 … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2022: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

மவுன்ட் மாங்கானு, நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.  இந்த போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. சர்வதேச ஒருநாள் … Read more