சச்சின் டெண்டுல்கரின் மகனை ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த மும்பை அணி

பெங்களூரு, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2-ஆம் நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கி நடைபெற்றது. ஏலத்தில் கடைசி நாளான இன்று தங்களுக்கு தேவையான வீரர்களை அணிகள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்தன.   இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் மகனும், இந்திய வீரருமான அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

தமிழ் பெண்ணை மணக்க இருக்கும் கிளென் மேக்ஸ்வெல் – வைரலாகும் திருமண பத்திரிக்கை..!

ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார். இதையடுத்து அவரை ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது பெங்களூரு அணி. கிளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.  அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தல், லாக்டவுன் என … Read more

ஐ.பி.எல் மெகா ஏலம் முதல் நாள் நிறைவு..!

மும்பை, 15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. அதற்கான மெகா ஏலம் மதியம் 12 மணிக்கு இன்று தொடங்கியது.  இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் 161 வீரா்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதல் வீரராக ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம் தொடங்கியவுடனேயே ஷிகர் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏடிகே மோகன் பகான் அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் அணி தன்னுடைய 7-வது … Read more

ஐபிஎல் ஏலத்தில் ஆவேஷ்கானை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

பெங்களூரு,  15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது.  இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆவேஷ் கானை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.  அவர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது தபாங் டெல்லி

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 31-32 என்ற புள்ளிகள் கனக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணியும், பெங்கால் வாரியர்ஸ் … Read more

புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா, புனேரி பால்டன் அணிகள் வெற்றி..!

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 41-34 என்ற புள்ளி … Read more

புரோ கபடி லீக்: அரியானாவை வீழ்த்தி புனேரி பல்டன் வெற்றி

பெங்களூரு, 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பண்டன் அணிகள் மோதின.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புனேரி பல்டன் 27-45 என்ற புள்ளிகள் கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ்சை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து பாட்னா பைரேட்ஸ்- உ.பி.யோத்தா அணிகள் மோதின. இரவு 8.30 மணியளவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 34-41 என்ற புள்ளிகள் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி தன்னுடைய 8வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி சார்பில் ஜேவியர் … Read more

3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை "ஒயிட் வாஷ்" செய்தது

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் … Read more