சென்னை: முக்கிய பகுதிகளில் மின்தடை.. உங்கள் பகுதி இருக்கிறதா?

பாராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் நாளை பராமரிப்பு பணிகளுக்க காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: தாம்பரம்/ சித்தலப்பாக்கம் பகுதி: மாம்பாக்கம் மெயின் ரோடு, பாபு நகர் 3வது தெரு, நேரு தெரு, ஐஸ்வரியா நகர், ஆர்.ஜி நகர் கடப்பேரி இலட்சுமிபுரம், ஓடப்பாளையம், பாரதிதாசன் தெரு, சாமுண்டிஸ்வரி நகர், ஸ்ரீபுரம், மாரியம்மன் கோவில் தெரு மற்றும் … Read more

முன்னாள் காதலிக்குத் தொல்லை.. தட்டிக்கேட்ட பெண்ணின் சித்தப்பாவை காரை ஏற்றிக் கொன்ற கொடூரம்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வேறொருவரை திருமணம் செய்து கொண்ட காதலிக்கு செல்போனில் தொல்லை கொடுத்து வந்தவன், அந்த பெண்ணின் சித்தப்பாவை காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…. விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்த அனிதா என்ற பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த பெத்துகுமார் என்பவனும் சில ஆண்டுகளுக்கு முன் … Read more

விவசாயிகளிடம் இருந்து இனி 'டிகேஎம்9' ரக நெல் கொள்முதல் செய்யப்பட மாட்டாது: தமிழக அரசு

சென்னை: ‘டிகேஎம்9’ ரக நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை நெல் கொள்முதல் நிலையங்கள் கைவிட வேண்டும் என்று தமிழ அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ‘டிகேஎம்9’ ரக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை நெல்லினை அரவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இவ்வகை அரிசியினை பொது விநியோகத் திட்டத்தின் … Read more

எங்கே இருக்கிறது மயிலாப்பூர் வரலாற்றை சொல்லும் மயில் சிலை? தீவிரமாக தேடும் காவல்துறை

மயிலாப்பூர் வரலாற்றை சொல்லும் மயில் சிலை எங்கே என தெப்பக்குளத்திற்குள் இறங்கி தேடி வருகிறது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு. பல்லவர்களால் கடந்த 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததால் இந்த கோயில் அமைந்துள்ள பகுதியும் மயிலாப்பூர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கோயிலில் புன்னைவன நாதர் சன்னதியில் லிங்கத்தை மலரால் மயில் அர்ச்சனை செய்வது போல சிலை இருந்ததாகவும் கடந்த … Read more

ஸ்டாலின் ஸ்டிக்கர் செல்போனில் அண்ணாமலை செல்ஃபி: சிறுமி வைரல் போட்டோ

திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தன் தந்தையின் செல்போனில் ஒரு சிறுமி பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நிமிடமும் பல புகைபடங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதில், சினிமா, டிவி, அரசியல், சமூகம் என பலவகையான புகைப்படங்களும் வீடியோக்களும் அடங்கும். தமிழக அரசியல் நடப்புகள் சமூக ஊடகங்களை பரபரப்பாக்க எப்போதும் தவறுவதில்லை. தமிழக அரசியலில் திமுகவினரும் பாஜகவினரும் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துக்கொண்டு … Read more

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்.. குழந்தை பலி… காவல்துறை தீவிர விசாரணை…!

குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சேலம் மாவட்டம் கொண்டலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். மாற்று திறளானியான அவர் அங்கு கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ரேவதி வீட்டில் இருந்த குருணை மருந்தை கலக்கி குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.  இதில் வரும் மயங்கிக் கிடந்தனர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர்,  உடனடியாக அவர்களை … Read more

காதலிக்க மறுத்த சிறுமியை மிரட்டிய இளைஞர் கூட்டாளிகளுடன் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த சிறுமியிடம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான். வாய்க்கால்ரோடு பகுதியைச் சேர்ந்த மௌலி ரஞ்சித் என்பவன், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரிடம் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான். சிறுமி மறுக்கவே, சமூக வலைதளத்தில் இருந்து அவரது புகைப்படத்தை எடுத்து, ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான். சிறுமியை அச்சமூட்டுவதற்காக கத்தியுடன் தாம் இருக்கும் புகைப்படத்தையும் அவருக்கு … Read more

நாமக்கல் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கு: 12 ஆண்டுகளுக்குப் பின் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

நாமக்கல்: பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சி. வேலுச்சாமி. இவர் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி ஓட்டும் பெண் தொழிலாளி ஒருவர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இச்சூழலில் கடன் பெற்ற தொழிலாளியின் மகளை கந்து … Read more

ஜெயலலிதா மீதான வழக்கு – தீபா, தீபக் சேர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான செல்வ வரி மேல்முறையீட்டு வழக்கில், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. WEALTH TAX எனும் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என ஜெயலலிதா மீது வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்தது. அதில் தன்னை விடுவிக்கக்கோரி அவர் தாக்கல் மனுவை விசாரித்த மேல் முறையீட்டு தீர்ப்பாயம், 2008ஆம் ஆண்டு ஜெயலலிதாவை விடுவித்தது. அதனை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் … Read more

144 தடை மீறல் : இயக்குநர் கௌதமன் தூத்துக்குடியில் கைது

Director Gowthaman Arrested In Tuticorin Airport : தென்காசி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தூத்தக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியில் பொதுச்செயலாளருமான வ.கௌதமன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டத்தில், குறிஞ்சாக்குளம் காந்தாரியம்மன் கோவில் வழிபாட்டு உரிமை போராட்டத்தில், உயிரிழந்த 4 பேருக்கு நடுக்கல் வழிவாடு செய்யவும், அங்கு காந்தாரியம்மன் சிலை அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற இயக்குநரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான வ.கௌதமனுக்கு அழைப்பு … Read more