நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இத்திட்டத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சம்பல், கொட்டக்குடி ஆகிய ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நியூட்ரினோ திட்டத்திற்காக ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு சுரங்கம் தோண்டப்பட உள்ளதால், பாறைகள் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மாநில … Read more

பல நாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகம்; இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகம் – தமிழிசை கருத்து

நாமக்கல்: “பல்வேறு நாடுகளில் மனநல மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகமாக உள்ளன” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கே.புதுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் குலதெய்வக் கோயிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “பல்வேறு நாடுகளில் மனநல … Read more

விவசாயிகளின் எதிர்பார்ப்பு பட்ஜெட்டில் பூர்த்தியாகுமா?

விவசாயிகளிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை அமையும் என உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வரும் சனிக்கிழமை அன்று வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையொட்டி மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சென்னை சேப்பாக்கத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வேளாண் நிதி நிலை அறிக்கையை தயார் செய்வதற்கு முன்பாக 250-க்கும் மேற்பட்ட … Read more

அந்த கண்ண பாத்தாக்கா.. நீல கலர் புடவை, ஜிமிக்கி, மூக்குத்தி.. லாஸ்லியா நியூ லுக் வைரல்!

இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, இளவயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார். இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் மற்றும் சதீஷ் … Read more

குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம்கள்! பயன்படுத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி வேண்டுகோள்.!

குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கும் சிறப்பு முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை இன்று வழங்கினார். தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 138, எம்.ஜி.ஆர் … Read more

தரமற்ற உணவகத்தில் அரசுப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், நடத்துனர் “சஸ்பெண்ட்”

கடலூரில், தரமற்ற உணவகத்தில் அரசுப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அரசுப் பேருந்துகள் தரமற்ற உணவகங்களில் நிறுத்தப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டிய உணவகங்களின் பட்டியலை போக்குவரத்து துறை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த 10ந் தேதி, சென்னையில் இருந்து விருத்தாச்சலத்துக்குத் சென்ற அரசுப் பேருந்து, அங்கீகரிக்கப்படாத தரமற்ற உணவகத்தில் நிறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து பேருந்தின் நடத்துனர் சேட்டு மற்றும் ஓட்டுநர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். Source … Read more

நெல் கொள்முதலுக்கு கட்டாய ஆன்லைன் பதிவை ரத்து செய்க: தமிழக வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் சங்கம் 15 ஆலோசனைகள்

சென்னை: நெல் கொள்முதல் செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் எனபதை ரத்து செய்ய வேண்டும்; வேளாண் விளைப்பொருட்களை சேமித்து வைக்க தேவையான ஊராட்சிகளில் குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை, தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டுக்காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வழங்கியுள்ளது. இதுகுறித்து இச்சங்கம் இன்று வெளியட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் – உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவசாயிகள் … Read more

"சட்டத்தின் ஆட்சியே ஜெயகுமாரை கைது செய்தது" – ஆர்.எஸ்.பாரதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது புழுதி வாரி வீசுவதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனையோ அவதூறு பேட்டிகளை ஜெயக்குமார் கொடுத்தாலும், அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்பது திமுக தலைவர் காட்டிய பெருந்தன்மை எனக் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசைப் பார்த்து சகிப்புத்தன்மையற்ற அரசு என ஜெயக்குமார் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்தை … Read more

‘கழகம் காட்டிய அன்பு கீதா உபதேசம் போல உறுதியைத் தந்தது’ என்.ஆர் இளங்கோ எம்.பி உருக்கம்

மூத்த வழக்கறிஞரும் திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் ரங்கநாதன், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஈ.சி.ஆர் சாலையில் கீழ்புதுப்பட்டு என்ற இடத்தில் வியாழக்கிழமை அதிகால நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சாலை விபத்தில் மகன் உயிரிழந்ததால் திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ துயரத்தில் மூழ்கினார். அவருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரங்கல் தெரிவித்தார். மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மூத்த வழக்குரைஞரும், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ அவர்களின் … Read more

பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த Cognizant நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்த Cognizant நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கை தமிழர்களுக்கு இலவச தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கியதோடு, மதுரை பால்பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 30ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதி மற்றும் பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த … Read more