தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு ஏற்படும்? எச்சரிக்கை விடுக்கும் Dr அன்புமணி இராமதாஸ்.!

நிலக்கரி பற்றாக்குறையால் மின்னுற்பத்தி பாதிப்பு: போக்குவதற்கு நடவடிக்கை தேவை என்று பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “நிலக்கரி பற்றாக்குறையால் மேட்டூர், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் அனல் மின்நிலையங்களில்  மின்னுற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், 4320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் அதிகபட்சமாக 2240 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகியுள்ளது! தமிழகத்தின் 5  அனல் மின் நிலையங்களுக்கு தினமும் 60,000 டன் … Read more

மருந்தகங்களில் இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர்

மருந்தகங்களில் இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் லேப் டெக்னீசியன்களின் கருத்தரங்கில் பேசிய அவர், லேப் டெக்னீசியன்கள் 8 கோரிக்கைகளை வழங்கியுள்ளதாகவும், அதைப் பரிசீலிக்கக் குழு அமைத்து 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  Source link

பெற்றோரை இழந்து ஒரு வேளை உணவுக்கு வழியின்றி தவிக்கும் 3 குழந்தைகள்

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த ஆவணியாபுரத்தில் பெற்றோரை இழந்து தங்கை மற்றும் தம்பியுடன் ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் தங்களை பாதுகாத்து அரவணைக்க வேண்டும் என முதல்வர் மற்றும் ஆட்சியர் உதவிட வேண்டும் என பத்தாம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் வசித்தவர் தையல் தொழிலாளி லோகநாதன். இவரது மனைவி வேண்டா. இவர்களுக்கு கார்த்திகா(15), சிரஞ்சீவி(14), நிறைமதி(10) ஆகிய 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். … Read more

மதுரை: உற்சாகமாக நூற்றுக்கணக்கானோர் பற்கேற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தில் உள்ள சாவட்டான் கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விவசாயம் செழிக்க மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்நிலையில், இன்று மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில், மீன்களை பிடிப்பதற்காக நள்ளிரவு முதலே ஏராளமான பொதுமக்கள் கண்மாய் கரையில் காத்திருந்தனர். இதையடுத்து அதிகாலையில் கிராம பெரியவர்கள் வெள்ளை துண்டை வீசியவுடன் ஒற்றுமையாக … Read more

ஆவடி OCF நிறுவனத்தில் 180 பணியிடங்கள்; 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

OCF india invites application for 10th and ITI apprentice training: தமிழகத்தின் ஆவடியில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆடை தொழிற்சாலையில் (Ordinance Clothing Factory) 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 180 பயிற்சியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.சி.எஃப்-ல், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஓ.சி.எஃப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 180 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு … Read more

இது பெரும் அநீதி., வெளியான அறிவிப்பால் பெரும் அதிர்ச்சியில் டாக்டர் இராமதாஸ்.!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான ஆண்டு வட்டி விகிதம், 2021-22 ஆம் ஆண்டில், 8.10% ஆக குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஒரே நேரத்தில் 0.40% குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது. வருங்கால வைப்பு நிதி மீது கடந்த 44 ஆண்டுகளில் இது தான் மிகவும் குறைவான வட்டியாகும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியாவில் அரசுத்துறை, … Read more

விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன் கைது

திருவண்ணாமலை மாவட்டம் தாளவாடியில் விடுதியில் தங்கி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, விடுதி காப்பாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். தூத்துக்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவன் கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுதி காப்பாளராக பணியாற்றி வரும் நிலையில், அவன் சில மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, விடுதிக்கு சென்ற … Read more

போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? வட்டார கல்வி அலுவலர் விளக்கம்

புதுக்கோட்டை: துண்டு சீட்டுகளில் குறிப்பு எடுத்து படித்து வந்தால் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என்று திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கு.கருணாகரன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மேற்பனைக்காட்டில் இன்று(மார்ச் 13) நடைபெற்ற போட்டித் தேர்வு வழிகாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது: “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 6 முதல் 10 -ம் வகுப்பு புத்தகங்களை படித்தால் போதுமானது. அதில், ஆங்கில புத்தகம் படிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு புத்தகத்தையும் புரியும்படியாக வாசித்து, … Read more

“இயற்கை வேளாண் உற்பத்தியை பெருக்கவேண்டும்”- ஆளுநர் ஆர்.என்.ரவி

“ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை முறையில் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அதிக அளவில் நமது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது” என ஆளுநர் ஆர் என் ரவி பேசியுள்ளார். கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் உள்ள ருக்மணி சமேத பாண்டுரெங்கன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற வித்யா வித்யாலயா வேதபாடசாலை பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “வேதங்கள் பல்லாயிரம் … Read more

ஆளுநர் ரவியை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்: வைகோ அறிக்கை

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. கூட்டாட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் … Read more