பழநி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: மார்ச் 18-ல் தேரோட்டம்

பழநி: பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் தீர்த்தம் எடுத்துவந்து வழிபடத் துவங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி நடைபெறவுளளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலின் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருள அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற … Read more

”யாருடைய தலையீடும் இன்றி தனித்து செயல்படுகிறேன்” – தாம்பரம் மேயர் வசந்தகுமாரி

தன்னுடைய நிர்வாகத்தில் யார் தலையீடும் இல்லை தனித்து செயல்படுவதாக தாம்பரம் மேயர் தெரிவித்தார். சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது… மேயரின் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என கேட்டதற்கு, தான் தனித்து, சுதந்திரமாக செயல்படுவதாகவும், யாருடைய தலையீடும் இல்லை, என்றார். சென்னை மாநகராட்சிக்கு இணையாக தாம்பரம் மாநகராட்சியை உருவாக்க திட்டமிடல் குறித்து … Read more

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் நன்றி

உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவ, மாணவிகளின் கடைசி குழுவினரை சென்னை விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்ற பிறகு மத்திய அமைச்சர் ஜெயசங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் … Read more

பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பேன்: சிவகாசி மேயர் சங்கீதா சிறப்புப் பேட்டி

”சிவகாசி பட்டாசு விபத்து எப்போதைக்குமான கவலைக்குரிய செய்தி. பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் சரியான நெறிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் விபத்தைத் தடுக்கலாம். நிச்சயம் விபத்தை தடுப்பதற்கு உரிய அதிகாரிகளின் ஆலோசனை பெற்று தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்” என்கிறார் முதன்முறையாக மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசி மாநகராட்சியின் மேயர் சங்கீதா. சிவகாசியில் திமுக சார்பாக, 34-வது வார்டில் வெற்றி பெற்ற சங்கீதா, 10 வருடங்களுக்கு மேலாக அரசியல் இருந்து வருகிறார். சிவகாசியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சங்கீதாவின் பேச்சு, அப்பதவிக்கான … Read more

தென்காசி: மாணவி எடுத்த விபரீத முடிவு-பேராசிரியரின் செயல்தான் காரணமென மாணவர்கள் போராட்டம்

சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி – சிந்தாமணியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் இந்து பிரியா. கணேசன் இறந்துவிட்ட நிலையில், அவரது தாய் மாடத்தி அம்மாள் கூலி வேலை செய்து மகள் இந்து பிரியாவை புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படிக்க வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி உலக மகளிர் … Read more

WhatsApp Web: டெலிட் செய்த மெசேஜை பார்க்கும் ஈஸி வழி

டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வெப் யூஸ் செய்பவர்களின் எண்ணிக்கை, அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. லேப்டாப்பில் வேலை செய்பவர்கள் நண்பர்களுடன் உரையாடவும், அலுவலக உரையாடல்களுக்காகவும் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த தொடங்கினர். பலரும், அதனை எளிதாக அணுகும் வகையில் சிஸ்டம் பிரவசரில் மார்க் செய்து வைத்திருப்பார்கள். பக்கத்து டேப்பில் திறந்திருக்கும் வாட்ஸ்அப் சாட்டை எளிதாக மற்றவர்களிடமிருந்து மறைக்க முடியாது. பலரும் வாட்ஸ்அப் வெப் லாகின் தானாகவே வரும்படி செட்டிங்கஸ் செய்துவைத்திருப்பார்கள். ஸ்மார்ட்போனை போல், டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வெப் செயலிக்கு அவ்வளவு … Read more

சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயக்குமாரை சந்தித்து நலம் விசாரித்த ஓபிஎஸ்., இபிஎஸ்,

3 வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். திமுக பிரமுகரை தாக்கியது, விதிகளை மீறி போராட்டம் நடத்தியது, நில அபகரிப்பு என மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு, மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் இன்று காலை புழல் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் … Read more

தமிழக பாரம்பரிய உடை அணிந்து தஞ்சைப் பெரிய கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்

தஞ்சாவூர்: தமிழக பாரம்பரிய உடை அணிந்தபடி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இன்று வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிற்பகல் 3 மணிக்கு, புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்துக்கு சென்று அங்குள்ள அரிய வகை நூல்களை பார்வையிட்டார். அப்போது அவர் பேன்ட் சட்டை அணிந்திருந்தார். பின்னர் மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தமிழக ஆளுநர் பட்டு வேட்டி, … Read more

கடலூர்: எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் பொது இடங்களில் மது அருந்தக் கூடாது என காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இதையெல்லாம் மீறி கடலூர் மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நேற்று வரை பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்தியதாக 3112 பேர் மீது கடலூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். … Read more

நாள் முழுவதும் சுகர் கண்ட்ரோல்… காலையில் இந்த ஜூஸ் குடிங்க!

Tamil Health Update : காலையில் எழுந்திருக்கும்போது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செயல்களுடன் தொடங்குவது நாள் முழுவதும் சரியான மனநிலையில் இருக்கும் ஒரு முயற்சி. மேலும், எழுந்தவுடன் உங்கள் உடலில் நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் உங்களுக்கு தென்படலாம். சிலர் அமிலத்தன்மையை உணர்வார்கள், சிலர் முகவீக்கம்,, உடல் ஆற்றல் குறைவு, எழுந்தவுடன் சூரிய ஒளியில் இருந்தாலும் கூட குளிரை உணர்வார்கள். இதனால் காலையில் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியமானது. அதிலும் குறிப்பாக நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால், உங்கள் … Read more