உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள்: விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “24.02.2022 அன்று ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில உக்ரைனுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைனில் சிக்கிய தமிழ்நாட்டைச் … Read more

முக்கியத்துவம் பெறும் பரங்கிமலை ரயில் நிலையம்

சென்னையின் அடுத்த மிகப்பெரிய பொது போக்குவரத்து தலமாக பரங்கிமலை ரயில்நிலையம் உருவாகிக்கொண்டு இருக்கிறது. மெட்ரோ ரயில் கட்டம்-2 தாழ்வாரங்கள் தயாராகிய பின்பு சென்னையில் மிகப்பெரிய போக்குவரத்து மையமாக அமைய பரங்கிமலை ரயில் நிலையம் இருக்கிறது என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு மக்கள் போக்குவரத்திற்காக இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள், ஒரு எம்.ஆர்.டி.எஸ். பாதை மற்றும் புறநகர் வாகனங்கள் ஆகியவற்றிற்கு இடையே தன் பயணத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இவை மட்டுமல்லாமல், மக்களால் … Read more

ஜாமீனில் விடுதலையான ஜெயக்குமாரை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சந்திப்பு.!!

சென்னை துரைப்பாக்கத்தில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து விட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இது குறித்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் … Read more

பெண்களுக்கான 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேறும் – கனிமொழி

பெண்களுக்கான 33சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிச்சயம் நிறைவேறும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நம்பிக்கை தெரிவித்தார்.  சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பெண்கள் தங்களை சுற்றி உருவாக்கப்படும் தடைகளைத் தகர்த்தெறியும் போது தான், அவர்களுக்கான இலக்கை அடைய முடியும் என்றார். மேலும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை, கனவை, லட்சியத்தை யாருக்காகவும் விட்டுத்தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கனிமொழி குறிப்பிட்டார்.  Source link

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் விடுவிப்பு: புழல் சிறை வாயிலில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் கைதானமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று காலை அவர் சென்னை புழம் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். வழக்கு பின்னணி: சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள மீன் வலை தொழிற்சாலை நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து … Read more

'கெத்தா' சுற்றிக்கொண்டிருந்த காட்டெருமைக்கு நேர்ந்த பரிதாபம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காணிக்கைராஜ் நகர் பகுதியில் உள்ள வீட்டின் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதி ஆகும். இந்த வனங்களில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானை போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் மற்றும் உணவுக்காக குடியிருப்பு பகுதியில் இந்த வன லிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அருவங்காடு அருகே உள்ள காணிக்கைராஜ் … Read more

Tamil News Today LIVE: மகளிர் உலகக் கோப்பை.. இந்திய கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!

Go to Live Updates Tamil Nadu News Today LIVE: நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை விடுதலையானார். என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. ஜெயக்குமார் பேட்டி என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயற்சித்தனர் . திமுக அரசு’ ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் … Read more

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் வேலைவாய்ப்பு.!!

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மூத்த திட்ட அலுவலர், திட்ட இணை காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் பணியின் பெயர் : மூத்த திட்ட அலுவலர், திட்ட இணை கல்வித்தகுதி … Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், நாளையும், நாளை மறுநாளும் தென் தமிழக மாவட்டங்களில் … Read more

அரசுப் பள்ளி மாணவரின் உடல்நல விவரங்களை சேகரிப்பது ஏன்? – பள்ளிக்கல்வி துறை விளக்கம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதியே உடல்நலம் சார்ந்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சுய விவரங்கள், கல்வி சார்ந்த பல்வேறு தகவல்கள் பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கான நலத் திட்டங்கள், கற்றல் செயல்பாடுகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிடையே, சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி மாணவர்கள் உடல்நலம் சார்ந்த தகவல்களையும் … Read more