சேலம் – சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்: எம்.பி. தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

சேலம்: சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சென்னைக்கு விமான சேவை தொடங்குவது குறித்து சேலம் எம்.பி. தலைமையில் நடந்த விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுர விமான நிலையத்தில், மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தில் இயக்கப்பட்ட சேலம் – சென்னை பயணியர் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அதே திட்டத்தில் மீண்டும் விமான சேவையைத் தொடர விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சேலத்தை சேர்ந்த … Read more

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் ஸ்கீம்… ராஜஸ்தான், சத்தீஸ்கர் வழியில் தமிழகம்?

அண்மையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில அரசுகள், அம்மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவருவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால், தமிழகத்திலும்புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்கள் மட்டுமல்லாமல், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பழைய ஓவ்யூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்காக மாநில தலைமைச் … Read more

நூல் விலை உயர்வு! குமாரபாளையத்தில் 15 நாட்கள் ஜவுளி உற்பத்தி வேலை நிறுத்தம்.!

நூல் விலை அதிகரிப்பால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி குமாரபாளையத்தில் 15 நாட்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நூல் விலை உயர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 15 நாட்கள் நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் தரப்பில், விசைத்தறிகளில் காட்டன் ஜவுளி ரகங்கள் உற்பத்தி … Read more

ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் – உயர்நீதிமன்றம்

ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் நிலமோசடி வழக்கில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் – உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் நிலமோசடி வழக்கில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு ஜெயக்குமார் மீதான 3 வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது – விரைவில் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு   Source link

மார்ச் 11: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,710 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.10 வரை மார்ச்.11 மார்ச்.10 … Read more

‘இதயத்தில் ரத்தம் கசிகிறது’ குலாம் நபி ஆசாத் வீட்டில் அதிருப்தி தலைவர்கள் ஆலோசனை

காங்கிரஸ் கட்சிக்கு இந்த நெருக்கடி புதிதல்ல – 2014 முதல் நடந்த 45 தேர்தல்களில் 5-ல் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த முறை வேறு ஒரு விஷயம், தோல்விக்கு காரணம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வழக்கமான பல்லவி கூட இல்லை. மாறாக, விரக்தியையும் வருகிற ஆபத்தை உணர்ந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் செயற்குழுக் கூட்டம் விரைவில் வரவிருக்கும் வழியைப் பற்றி விவாதிக்கப்படும் என்று சமிக்ஞை செய்தார். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை! தமிழக அரசு தகவல்.!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்கள், அதனால் உயிரிழந்தவர்கள் விவரங்கள், குணமடைந்தவர்கள் விவரங்கள் என பல்வேறு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.  தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 13-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more

புதுச்சேரியில் இம்முறையும் இடைக்கால பட்ஜெட்தான்: கடும் நிதி நெருக்கடியின் பின்புலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இம்முறையும் இடைக்கால பட்ஜெட்டுக்காக அம்மாநில சட்டப்பேரவை இம்மாத இறுதியில் கூடுகிறது. புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலை மாறி, மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதிலும், கடந்த கால புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டன. உரிய நேரத்தில் … Read more