'திமுகவின் துரோகத்திற்கு மருந்தாக உச்ச நீதிமன்ற உத்தரவு' – பேரறிவாளன் ஜாமீன் குறித்து தினகரன் கருத்து

சென்னை: “தமிழ் உணர்வாளர்களும், சிறுபான்மை மக்களும் திமுகவின் இரட்டை வேடத்தை முழுமையாக புரிந்துகொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏழு தமிழர் விடுதலையில் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதைத் தொடர்ந்து எஞ்சிய ஆறு பேரும் பிணையில் விடுதலை ஆகிவிடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ‘பல ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழு தமிழரையும், இஸ்லாமிய … Read more

சம்பந்தி ஆன தி.மு.க வி.ஐ.பி-கள்: மூத்த அமைச்சர்கள்- மு.க.அழகிரி பங்கேற்ற மண விழா

திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் நடைபெற்ற திருமண விழாவில், மு.க. அழகிரி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். மு.க. அழகிரியைப் பார்த்த அமைச்சர்கள், திமுக விஐபிகள் அனைவரும் மரியாதையுடன் வணக்கம் சொல்லி நலம் விசாரித்தனர். தென் சென்னை தொகுதி திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திமுக பிரமுக டாக்டர் மகேந்திரன் ஆகிய 2 திமுக விஐபிகளும் சம்பந்தியாகியிருக்கிறார்கள். தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் திமுக … Read more

5 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி.. கவலையே இல்லாமல் கார்த்தி சிதம்பரம் ட்வீட்.! 

உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் ஒரு கருத்து விமர்சனங்களை பெற்று வருகிறது.  உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. ,இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மீதமுள்ள மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாபில் ஆட்சியில் … Read more

திண்டிவனத்தில் திமிங்கிலக் கழிவுகளைக் கடத்த முயன்ற 4 பேர் கைது

விழுப்புரம்: திண்டிவனத்தில் திமிங்கிலக் கழிவுகளைக் கடத்தியதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். திண்டிவனம் நகரில் முருங்கப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் திமிங்கலத்தின் கழிவுகளை பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோகனரங்கன்( 62) என்பவரின் வீட்டில் திமிங்கலத்தின் கழிவுப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அப்போது, மோகனரங்கன் வீட்டுக்கு 2 பைக்கில் வந்த 4 பேர் 2 … Read more

என்னை கைது செய்த தமிழச்சி தங்கபாண்டியன் கணவர்… ஸ்டாலின் கூறிய ஃப்ளாஷ்பேக்!

சென்னையில் இன்று காலை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின், விழாவின்போது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். திமுகவில் இளைஞரணி என்று புதிய அணியை உருவாக்குவது குறித்தும், அதற்கு யாரை பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது குறித்தும் அப்போதைய மாவட்டச் செயலாளர்களிடம் எனது தந்தை கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலினை நியமிக்க … Read more

பாஜக அலையில் இருந்து தமிழ்நாடு தப்பித்துக்கொள்ள முடியாது-ஹெச்.ராஜா.!

பாஜக அலையில் இருந்து தமிழ்நாடு மட்டும் தப்பித்துக்கொள்ள முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் … Read more

பரோல் நீட்டிப்பு தந்து எனது மகனின் உடல்நிலை சீராக உதவிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: அற்புதம்மாள்

வாணியம்பாடி: ’ஒவ்வொரு மாதமும் பரோல் நீட்டிப்பு கொடுத்து, பேரறிவாளனின் உடல்நிலை சீராக பெரிய அளவில் ஒத்துழைப்பு அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது … Read more

வாவ்! சொல்ல வைக்கும் டாப் ஹீரோ ஹீரோயின்களின் ஹனிமூன் கேலரி!

1/6 Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) செளந்தர்யா, விசாகன் வணங்காமுடி தம்பதினர் சுவிட்லாந்தில் ஜாலின் ஹனிமூன் 2/6 Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click … Read more

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி.. சோனியா காந்தி எடுத்த அதிரடி முடிவு.! 

உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. ,இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர மீதமுள்ள மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாபில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.  மேலும், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் படு மோசமான தோல்வியை எட்டியுள்ளது. … Read more

4 மாநிலங்களில் வெற்றி… மக்களின் மனங்களை வென்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்: ஓபிஎஸ்

சென்னை: ”கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மக்களின் மனங்களை வென்றதற்கு வாழ்த்துகள்” என்று பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா என நான்கு மாநிலங்களை வசப்படுத்துகிறது பாஜக. இதன் மூலம் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் நான்கில் ஆட்சியில் அமரும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் … Read more