இனிய பொங்கல் 2021: இந்த சிறப்பு வாழ்த்துகளுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள்

1/14 Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Happy Pongal 2021 Wishes and Greetings 2/14 Click to share on Twitter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to … Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி.. அரசு பேருந்து ஓட்டுநர் இருவர் பலி..!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். சென்னை மத்திய மாநகர பேருந்து பணிமனையில் நேராக இருக்கும் இவருடன் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த நந்தகோபன் என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இருசக்கர வாகனத்தை பணிமனையில் விட சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது இந்த விபத்தில் ஜோதி பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக … Read more

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை பெற வேண்டும்: சசிகலா

சென்னை: “பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் இந்த வழக்கில் அனைவரும் விடுதலை பெற்றிருப்பார்கள்“ என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது. பேரறிவாளன் நெடுங்காலமாக தொடர்ந்து நடத்தி வந்த சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் விடுதலையாக வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமாக … Read more

கணவர் யோகி உடன் திடீரென வெளிநாட்டுக்கு பறந்த மைனா.. எங்கே போயிருக்காங்க தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி. தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா பணியை தொடங்கினார். அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் … Read more

ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள்! 17-ஆம் தேதி முதல்கட்ட ஆலோசனை.!

ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்திருக்கிறது.  அதில் ஒவ்வொரு தொழிற்சங்கம் சார்பாக ஒரு நிர்வாகியை இணைத்து பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் … Read more

சேலம்: சாலை விபத்தில் இறந்த நண்பரின் நினைவு நாளில் ரத்த தானம் வழங்கி  விழிப்புணர்வு

சேலம்: சேலம் அருகே சாலை விபத்தில் சிக்கி ஏராளமான ரத்தம் வெளியேறியதால் மரணமடைந்த இளைஞரின் நினைவு நாளில், அவரது நண்பர்கள் ரத்த தானம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கை.புதுார் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சீனிவாசன் (26 ) திருச்சியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி திருச்சியில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, நடந்த … Read more

JEE Exam: 21 ஏழை மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அனுப்பி வைத்த நெல்லை கலெக்டர் விஷ்ணு!

தூத்துக்குடியில் புதன்கிழமை காலை விமானத்தில் ஏறிய அரசுப் பள்ளியில் படிக்கும் 21 ஏழை மாணவர்களுக்கு அதுதான் முதல் விமானப் பயனம். அந்த மாணவர்களால் தாங்கள் விமானத்தில் பறக்கப்போகிறோம் என்பதை நம்பமுடியவில்லை. ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வரும் 21 ஏழை மாணவர்களையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தனது சொந்த செலவில் விமானத்தில் அனுப்பிவைத்து அவர்களை லட்சியக் கனவில் மிதக்க வைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக உள்ள வி. விஷ்ணு ஐ.ஏ.எஸ், 2012ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி … Read more

தமிழக பட்ஜெட் மக்களுக்கானதாக இருக்கும்! இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி.!

தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.  மேலும்  குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குதல் போன்ற மீதி இருக்கும் வாக்குறுதிகளை … Read more

”என் மகன் விவசாயத்தில் ஈடுபடுவார்” – பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் நெகிழ்ச்சிப் பேட்டி

திருப்பத்தூர்: ”விவசாயத்தில் முழு ஈடுபாடு கொண்டுள்ள என் மகன், தற்போது பொருளாதார வசதி இல்லாததால் வரும் காலங்களில் கண்டிப்பாக விவசாயத்தில் ஈடுபடுவார்’’ என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பேரறிவாளன் (52). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, சிறுநீரக தொற்று, மூட்டு வலிக்கு மருத்துவ சிகிச்சை பெற இருந்ததால் கடந்த … Read more