டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம்  – கோகுல்ராஜ் வழக்கறிஞர் உறுதி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம் என்று கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஆஜாரான வழக்கறிஞர் மோகன் தெரிவித்துள்ளார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் அமைந்துள்ள சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் சிலைக்கு, வழக்கறிஞர் ப.பா மோகன் மற்றும் பல்வேறு அமைப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ப.பா மோகன், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்காருக்கும், பெரியாருக்கும், சமூக நீதிக்கும் … Read more

40 வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு… வைரலாகும் சிஎஸ்கே கேப்டனின் வீடியோ!

MS Dhoni Tamil News: 15வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் – 2022) தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க விழாவுடன் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் துவங்க 16 நாட்கள் உள்ள நிலையில், தொடரில் கலந்துகொள்ளும் 10 அணிகளும் முகாமிட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. … Read more

5 மாநில தேர்தல் : மாலை 3 மணி முன்னிலை நிலவரம்.!

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. மாலை 3.00 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக 4 மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.  மாநிலம் வாரியாக முன்னிலை நிலவரம் : கோவா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தற்போது 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், ஆம் ஆத்மி இரு இடத்திலும், … Read more

'தமிழகத்தில் 2024 (அ) 2026-ல் ஆட்சியில் அமர பாஜக தயார்' – 5 மாநில முடிவுகளுக்குப் பின் அண்ணாமலை உறுதி

சென்னை: “தமிழகத்தில் 2024-ல் தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொண்டு ஆட்சியில் அமர்வதற்கும், மக்களின் அன்பை பெறுவதற்கும் பாஜக தயாராக இருக்கிறது” என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 5 மாாநில தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மறுபடியும் ஒருமுறை நம்முடைய நாடு, ஒருமித்த குரலிலே உறுதியான வார்த்தையை இன்று பதிவு செய்திருக்கிறது. நாங்கள் பாரத … Read more

டிஜிபியாக பதவி உயர்வுப் பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள்: தமிழக அரசு உத்தரவு

4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி-க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. தமிழக காவல்துறை சைபர் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியான அம்ரீஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சைபர் பிரிவு டிஜிபியாகவே பணி தொடருவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைபோல, தாம்பரம் காவல் ஆணையராக உள்ள கூடுதல் டிஜிபியான ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். … Read more

திராவிட திருமணங்கள்… நாடாளுமன்றத்தில் சட்டம்… தி.மு.க எம்.பி-களுக்கு ஸ்டாலின் உத்தரவு

சுயமரியாதை திருமணங்களான திராவிட திருமணங்களை நாடுமுழுவதும் சட்டப்பூர்வமாக்க நடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் மகள் நித்திலாவுக்கும் திமுக ஐ.டி. விக் இணை செயலாளர் டக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் சென்னையில் புதன்கிழமை சுயமரியாதை திருமண முறையில் திருமணம் நடபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், மு.க.அழகிரி உள்ளிட்ட அரசியல் விஐபிகள் பலரும் கலந்துகொண்டனர். … Read more

#BigBreaking || சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க போகும் பாஜக.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து கொண்டு இருந்தது. மாலை 3.00 மணி தேர்தல் முன்னிலை நிலவரப்படி, பாஜக 4 மாநிலங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது.  இதில், கோவா மாநிலத்தில் பாஜக சுயேட்சை ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளதாக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக தற்போது 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. … Read more

5 மாநிலங்களில் 4-ல் வெற்றி என்பது பாஜகவின் நல்லாட்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்: ஜிகே வாசன்

சென்னை: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 4-ல் வெற்றி என்பது, பாஜக-வின் மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பாஜக-வின் வெற்றி பெரிதும் பாராட்டுக்குரியது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் … Read more

முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி மாணவி: ஓடிவந்து உதவிய எம்எல்ஏ

மாற்றுத் திறனாளி மாணவியின் கோரிக்கையை ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உடனடியாக நிறைவேற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா, தான் பள்ளிக்குச் சென்றுவர மிகவும் சிரமப் படுவதாகவும் அதனால் நாற்காலி ஸ்கூட்டரை வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இதை அறிந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தன்னுடைய சொந்த … Read more

கணவருடன் பெங்களூருவில் முடங்கிய சேகர்பாபு மகள்: கர்நாடக அமைச்சருடன் சந்திப்பு

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி தனது காதல் காணவருடன் பெங்களூரு சென்று கர்நாடக அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு கோரியுள்ளார். தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி (24) காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவர் சதீஷ் (27) உடன் சென்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவை பெங்களூருவில் புதன்கிழமை சந்தித்து தனது குடும்பத்தினரிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியிருகிறார். அமைச்சர் … Read more